"நான் "இறந்ததும்
எரித்துவிடாதீர்கள்
புதைத்துவிடுங்கள்
புதைத்த இடத்தில்
சிறுசிறு பூக்காளாவது பூக்கட்டும்
(இங்கு நான் என்பது நானல்ல நான் என்ற அகந்தை)
"மோதலில்தான்
காதலாம்
வா
மோதிப்பார்க்கலாம்
(கீழே விழாமல் மோதிப் பாருங்கள்)
"நீ இப்படித்தானா "
என்கிறாய்
எப்படி எப்படியோ
சொல்லி புரியவைத்தேன்
இறுதிவரை ஏற்கமறுக்கிறாய்
"நீயும் இப்படித்தானா "
கண்ட கண்ட கல்லை
கடவுள் என்கிறாய்
கண்ட கண்ட மனிதர்
காலை கழுவுகிறாய்
கண்டகண்ட சரக்கு
குடிக்கிறாய்
கண்டும் காணமலும்
கதைக்கிறாய்
நீ இருந்தும் இல்லாமலும்
வாழ்கிறாய்!
"தலைக்கணம் அதிகம்
என்கிறாய்
தவறு திருத்துவிடு
உண்மையில்
மனதில்தான் அதிககணம்
அதுவே என் குணம்
நன்றி இரு நாட்களாக சரியான தலைவலி! ஓய்வில் இருக்கும் சமயம்தான் கண்ணா பின்னானு எழுத வருகிறது! நன்றி