"அறிவு வளர்ந்திட ...
ஆங்கிலம் படிக்கணுமோ..
அவன் குடும்பம் தழைத்திட..
அயல்தேசம் போகணுமோ...!
"அரைகுறை நாயகிக்கு...
அள்ளித்தரும் மனசு ...
அய்யா என்பவனை ...
அருவருப்பாய் பார்க்கும் பல தினுசு ..!
"பிணம் கூட ஏங்கிடுமே...
காலணா காசுக்கு...நம்.,
பிரதமரும் சொன்னாருங்க...
நூத்திபத்து கோடி பேருக்கு ...
"குறிதாக்கும் ஏவுகணை....
நுட்பம் போதுமய்யா..
கைதாகும் மீனவனுக்கு ...
கருனணயில்லையா...!
"நீ முந்தி நான் முந்தி ..
மனப் பிரச்சனையோ...
பண்பாடு வளர்ந்திடுமா ...
பதில் கூறு புதுதலைமுறையே..!
"பட்டம் படிப்பு போதும்மா தம்பி..
சமுக ஒற்றுமை..
சமுக நல்லிணக்கம்..
சமுக பண்பாடு ..
மாறிடுமோ உன்னை நம்பி ..!!
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015--தமிழ் இனணய கல்வி கழகம் நடத்தும்
"மின் தமிழ் இலக்கிய போட்டி "களுக்காக எழுதப்பட்டது!
வகை (4) புதுக்கவிதை போட்டிகள் :முன்னேறும் உலகில் பண்பாட்டின் தேவைகள்! இவை என் சொந்த படைப்புதான் என்றும் வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும் வரை வேறெங்கும் வெளியாகாது எனவும் உறுதியளிக்கின்றேன்!