click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

18 September 2015

பண்பாடு படும்பாடு!!!!






"புலி விரட்டியப் பரம்பரை நாங்க ...

புறநானூறு  புகட்டிய தமிழன் தாங்க ...

தமிழ் வளர்த்து லாபமில்லை ...இங்கு

சாதி வளர எந்த தடையுமில்லை ...

மேலைநாட்டு கல்வி பாரு ...

அது மேலானவர்..பணத்தீவுதானே ...

வறியவர் வாக்கை கேளு .அவர்...

மண் சுமக்கும் கதை எழுது ....

குனிவதற்கு இலக்கணம் வகுத்தோம் ..

கூன்குருடாய் அவதரிக்க மறுத் தோம் ...

மீசைகவி கண்ட மாந்தரொல்லாம் ....

மூச்சுமுட்ட குடிக்கிறது பாரினிலே...

தலைநிமிர்ந்து நில்லடா? பல தலைமுறை -சொல்லிவிட்டோம் ....

தள்ளாடாமல் நில்லடா? என்பதை நம் -தலைவிதியாக்கிவிட்டோம் ..!

மறத்தமிழன் மரித்துவிட்டான் ....

மதுத் தமிழனாய் பிறந்துவிட்டான் ..!

படித்தவன் பரதேசம் போ...

பாமரன் இறந்து போ...

விவசாயி வீணாகிப் போ...

விடிவுகாலம் இல்லையதை மறந்து போ..!

தமிழ் வாழ "முற்றமிழ் "வேண்டும் ...

தரணி சிறக்க நற்றமிழன் வேண்டும் ..!!



இப்படைப்பு "வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகள்"களுக்காக நான் எழுதிய சொந்த படைப்பாகும்!

வகை (4) புதுக்கவிதை போட்டி!
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்!
இதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை  வேறெங்கும்  வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்!

-கரூர்பூபகீதன் -


25 comments:

  1. போட்டிக்கவிதை அருமை வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ!! மதல் வருகைக்கும் முதல் வாழ்த்திற்கும் நன்றிகள் பல

      Delete
  2. கவிதை அருமை
    வெற்றிபெற வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வருக! சகோ! தங்கள் வாழ்த்திற்கும் இனிய வருகைக்கும் நன்றிகள் பல?!!

      Delete
  3. அருமை நண்பரே வெற்றி நிச்சயம் வாழ்க தமிழ்

    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பரின் அருமை வாழ்த்திற்கு அருமை நன்றிகள் பல

      Delete
  4. கவிதை அருமை சகோ. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல

      Delete

  5. "மறத்தமிழன் மரித்துவிட்டான்...
    மதுத் தமிழனாய் பிறந்துவிட்டான்,..!" என்ற
    நிலை மாறி
    நம்மாளுங்க நல்லவங்க என்ற
    நிலை தோன்ற வேணும்
    போட்டியில் வெற்றி பெற
    எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நம்மாளுங்க நல்லவங்களா மாறும் எப்போது என்பதுதான் தெரியவில்லை!! வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல

      Delete
  6. உண்மை நிலையினைசொல்லி விட்டீர்கள்..ந்ன்றியுடன் வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே!தங்களின் அன்பு வாழ்த்திற்கும் இனிய வருகைக்கும் நன்றிகள் பல

      Delete
  7. உண்மை நிலையினைசொல்லி விட்டீர்கள்..ந்ன்றியுடன் வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ஊக்கப்படுத்தும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல

      Delete
  8. இன்றைய நிலையைக் கண்டு எழுந்த ஆதங்க வரிகள் அருமை சகோ. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ! இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல!!

      Delete
  9. அருமை! வாழ்த்துக்கள் நண்பா! பல பிரிவுகளில் போட்டிகளில் கலந்து கொள்கிறீர்கள் போல! உங்கள் ஆர்வத்திற்கும் உழைப்புக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே! இந்த மாதிரி சமயங்களில்தான் அதிகமாக எழுதி என் எழுத்தாற்றலை கூட்டவேண்டும்! வருகைக்கு மிக்க நன்றிகள் பல

      Delete
  10. மதுவில் மூழ்கிக் கிடக்கும் மறத்தமிழன் மயக்கம் தீர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா! மயக்கம் தெளிய விடமாட்டர்கள் நம் ஆட்சியாளர்கள்!! தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள் பல அய்யா!

      Delete
  11. >> மறத்தமிழன் மரித்துவிட்டான்..
    மதுத் தமிழனாய் பிறந்துவிட்டான்!..

    வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம்..

    ஆனாலும் - அருமை.. அருமை!..

    வெற்றியடைய நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  12. வாருங்கள் அன்பின் அய்யா!! முதல் வருகைக்கு என்மனமார்ந்த வணக்கங்கள் மகிழ்ச்சி!!!

    தமிழன் ஏற்கனவே மதுகுடித்து தலைகுனிந்துதான் இருக்கிறான் அய்யா!!!

    சிறப்பான வருகைக்கும் சிறப்பான வாழ்த்திற்கும் நன்றிகள் பல!!

    ReplyDelete
  13. கவிதை அருமை வெற்றிபெற வாழ்த்துக்கள்-சர்ஸ்வதி ராசேந்திரன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா! தங்களின் இனிய வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றிகள் பல!

      Delete
    2. வாருங்கள் அம்மா! தங்களின் முதல் வருகையை கண்டு மிக்க மகிழ்ச்சி! வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் பல!

      Delete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com