click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text
Showing posts with label என் கவிதைகள். Show all posts
Showing posts with label என் கவிதைகள். Show all posts

03 November 2015

எங்க ஊருக்கு வராதிங்க ...4.!



""கரும்பு காட்டுல நரிவிரட்டினோம் 

கம்பு காட்டுல கிளி விரட்டினோம் ..

கடலை காட்டுல காக்கா விரட்டினோம். ..

நெல்லு காட்டுல மயில் விரட்டினோம் ...


"குருதுக்குள்  எந்த அப்பனுமில்ல 

அள்ற அளவுக்கு விளையவுமில்ல 

விளையற அளவுக்கு மழையுமில்ல 

வானம் பாத்த மக்களுக்கு வேற வழியுமில்ல ....

"ஓயாம உழுத மாடுக .,

உறங்கியே  களச்சு போச்சுங்க ...

வரப்புலேயே மேய்ஞ்ச வண்டி மாடுக ...

பாரம் சுமக்க மறந்து போச்சுங்க ....



"காட்ட வித்தாவது கான்வெண்ட்டுல 

படிக்க வைக்கனும்ங்க ...

கடன் வாங்கியாவது கவர்மெண்டுல 

வேல வாங்கியே தீரணும்ங்க ...


"எங்க பொழப்பு மண்ணோடு 

மண்ணா கலந்தாச்சுங்க ...

எங்க மக்கா மாருகளாச்சும் 

ஆடி கார்ல ஆடாம போகட்டுங்க ..


"நீங்க இங்க வாழ வரவேணாம் 

எப்படி வாழரோம்னு பாக்க வாங்க!!


நன்றி!!! 



17 October 2015

எங்க ஊருக்கு வராதிங்க ...!



"நடக்க நல்ல பாதயுமில்ல..

நாட்டாமைக்கு நேரமேயில்ல...

நாலு தெரு நாப்பது வீடு ..

குடிக்க சொட்டு தண்ணியுமில்ல...!


"தெருகூத்து வண்ண. டீவிக்குள்ள ..

குடும்ப சண்ட நடுவீதியில ,

குறுதுக்குள்ள நெல்லுமில்ல..

கூலிக்கு போக வேலயுமில்ல..!


"அம்மி ஆட்டுக்கல்லு  பழசாச்சு ..

அரசு கொடுத்ததெல்லம் 

கெளரமாச்சு ,..


"பச்சயா இருந்த ஊரு ..

பசலபுள்ள சீக்காச்சு ...

பந்தி வச்ச. பழக்கம் ...

பாக்காம திண்ன வழக்காச்சு ...!


நீங்க எங்க ஊருக்க வரவேணாம் 

எப்படி வாழறோம்னு பாக்கவாங்க.,!!!


நன்றி!!! 

30 August 2015

கால் கிலோ கவிதைகள்!!


      ""உன் ....

       மின்சார விழிகள் ...

       திறவாவதால் ....

      அணுசக்திக்கு ...

      ஆசைப்படுகிறது ...

     இந்தியா ,...!!""




   ""என்னைப் பற்றி ...

     எல்லோரிடமும் ...

     எதையாவது. ...

     எந்நேரமும் ....

     சொல்லிக் கொண்டிரு ...

    "ஏனென்றால்????

   சில சமயங்களில் ...

   நீ..யார் என்பதை,.

    நானும்.,

   நான் யார் என்பதை .,

   நீயும்

   மறந்துவிடுவோம்,...!!""


நன்றி இவை 2005நான் கிறுக்கிய தொகுப்பிலிருந்து மறுபதிவு!! உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் நன்றி!!