"என்னுடைய முகநூல் வாட்ஸ்அப் கவிதைகள்!!
"
அப்பத்தா
ஆச்சிகளை
முதியோர் இல்லத்தில்
சேர்த்துவிட்டு
"அப்பாச்சிகளை "
ஷோரூம்களில்
தேடிக்கொண்டிருக்கிறோம் ...!!
"நீ கிடைக்க.
வெள்ளைப்பிள்ளையாருக்கு
108தேங்காய் உடைத்தேன்
எதிரே ..
ஏன் வந்தாய்
1008தேங்காயாய் அல்லவா
சிதறிப்போனேன் ,.!!
"கம்பங்கூழ் குடிச்சு
உயிர வளர்த்தவங்க ..
நுங்கு குடிச்சு
தெம்பு வளர்த்தவங்க ..
சாராயம் குடிச்சு
சண்ட வளர்த்தவங்க..
டாஸ்மாக்ல குடிச்சு
இப்ப அரச வளர்க்கிறாங்க ...!!
"தவறி விழுந்தோ.
தன்னால் விழுந்தோ
நல்ல விதைகளை
முளைக்க விடவதேயில்லை
நாம் ...!!
நன்றி! நாளைக்கு 4Gகவிதைகள் வரும்