click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text
Showing posts with label கீதன் கவிதைகள். Show all posts
Showing posts with label கீதன் கவிதைகள். Show all posts

28 October 2015

சில்லைறையாக சிரிக்காதே ..!4Gகவிதைகள்

விளக்கம் :4gகவிதை என்பது ரூல்ஸ் பார்க்காமல் எழுதுவதே (பி.கு) இங்கு பலர் அப்படித்தான் எழுதுகிறோம்!


"சில்லைறை "யாக 
ஏனடி ...
சிரித்து தொலைக்கிறாய் 
கோடி ரூபாய்க்கு 
எங்கு போவேன் ...!!

""ஒரே ஒரு தரம் 
திரும்பி பாரேன் 
தாரமாக வேண்டாமா?
சாபமாகுவதற்குள்
சம்மதம் தா ...!!


""உனை 
நினைக்காத சமயங்களில் 
கொசுவாய் கடிக்காதே 
ஆல்அவுட் 
வைக்கதுடிப்பவர்கள் 
அறியவில்லை ...!!


""110
நமக்கு நாமே 
முதல் கையொழுத்து,
மக்கள் கூட்டு இயக்கம்,
மக்களுக்காக மக்கள் பணி,
இத்தனையிருந்தும், 
நம்மை 
சேர்த்துவைக்க 
எவர்க்கும் துப்பில்லை ..!!


""சென்ற இடமெல்லாம் சிறப்பு 
முதல்வருக்கும் 
மதல் போட்டு குடிப்பவனுக்கும் .!



"மலர்கள் மலர்வது 
வாடுவதற்காகல்ல 
நம்மை வாழ்த்துவதற்காகத்தான் ...!!



நன்றி! இன்னும் நிறையாக இருக்கு! இது நிறைவா?
சொல்லுங்க ..!!





27 October 2015

கரிசனம் கட்டிகிட்டு அழுகுது ...!!


"ஏனிந்த திருட்டுத்தனம் 
முறைத்துப்பாரேன் 
மூழ்கிவிடவாப் போகிறேன் ..!

""*கரிசனம் 
கட்டிகிட்டு அழுகுது 
காவேரி 
கண்ணீர் வரண்டு புலம்பது 
கடமை 
கால்ல. விழுந்து கதறது 
தமிழ்நாடே 
கோடநாடு போகுது ..!!

"நீ பார்க்கும் 

பொருட்களும் ..

உனை பார்க்கும் 

பொருட்களும் 

சிந்திக்க வேண்டாம் 

சிரிக்காவது சொல்லிக்கொடு!! 

"டீவி குட்டிபோடாது 

ஆடு ஓட்டும் போடாது!!



""*அடக்கு முறைக்கு 

அடிபனிய மாட்டோம் 

என்றவர்கள் 

அரசு கடையை கண்டால் 

தளர்ந்துவிடுகிறார்கள்.,.!!



"நீ வீசிய கோலம் 
நீ வீசிய பார்வை 
நீ வீசிய முறைப்பு 
நீ வீசிய பேப்பர் 
நீ வீசிய பஸ் டிக்கெட் 
நீ வீசிய நான் 
இவையும் கவிதைதான் 

(இப்படி எழுதினாத்தான் லைக்ஸ் வருதுங்க)


நன்றி !!