click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text
Showing posts with label வலைபதிவர் திருவிழா புதுகவிதை போட்டி கவிதைகள்!. Show all posts
Showing posts with label வலைபதிவர் திருவிழா புதுகவிதை போட்டி கவிதைகள்!. Show all posts

21 September 2015

இனி என்று மாறுமோ...!




"அறிவு வளர்ந்திட ...

ஆங்கிலம் படிக்கணுமோ..

அவன் குடும்பம் தழைத்திட..

அயல்தேசம்  போகணுமோ...!


"அரைகுறை நாயகிக்கு...

அள்ளித்தரும் மனசு ...

அய்யா என்பவனை ...

அருவருப்பாய் பார்க்கும் பல தினுசு ..!


"பிணம் கூட ஏங்கிடுமே...

காலணா காசுக்கு...நம்.,

பிரதமரும் சொன்னாருங்க...

நூத்திபத்து கோடி பேருக்கு ...


"குறிதாக்கும் ஏவுகணை....

நுட்பம் போதுமய்யா..

கைதாகும் மீனவனுக்கு ...

கருனணயில்லையா...!


"நீ முந்தி  நான் முந்தி ..

மனப்  பிரச்சனையோ...

பண்பாடு வளர்ந்திடுமா ...

பதில் கூறு புதுதலைமுறையே..!


"பட்டம் படிப்பு போதும்மா தம்பி..

சமுக ஒற்றுமை..

சமுக நல்லிணக்கம்..

சமுக பண்பாடு ..

மாறிடுமோ உன்னை நம்பி ..!!


இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015--தமிழ் இனணய கல்வி கழகம் நடத்தும்
"மின் தமிழ் இலக்கிய போட்டி "களுக்காக எழுதப்பட்டது!

வகை (4) புதுக்கவிதை போட்டிகள் :முன்னேறும் உலகில் பண்பாட்டின் தேவைகள்! இவை என் சொந்த படைப்புதான் என்றும்  வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும் வரை வேறெங்கும் வெளியாகாது எனவும் உறுதியளிக்கின்றேன்!

19 September 2015

உழவனை அழிக்கும் பண்பாடுகள்!!



"ஏர் புடுச்ச கையெல்லாம் ..

  ஏசி ரூம் "க்கு ஏங்குதிங்க ..

  பஞ்சம் பிழைக்கும் பாமரனுக்கு. .

  பைபர் கேபிள் எதுக்குங்க ..!


"களத்து மேடு கவலை மறக்க ...

கண்டகண்ட "சீரியல் "பேசுறாங்க ..

கழைகெத்தியும் கருக்கருவாளும் .

கண்காட்சிய ஆக்கிட்டாங்க ...!

"சீமத்தண்ணு ஊத்தற நாளு ...

திருவிழா கூட்டம்தாங்க ..

அடுப்பு விறகுக்கும்..

அஞ்சு வருசம் மழையில்லங்க ..!


"கைநாட்டுக்காரன் காடு கரையில ..

"கம்பெனி  வேண்டாங்க ...

 கால் வயித்து கஞ்சிக்கும் ...

கையோந்த வைக்காதிங்க ...!!


"அஞ்சு மாச சிசுவும்

"ஆண்ராய்டு "ல விளையாடுதங்க..

அறிவு வளருமா..

அநியாயம் பண்ணாதிங்க ...!


"உண்மை பண்பாடு -அது 

உழவன் உள்ளத்தில் கண்டு ..

உலகறிந்த வலைப்பதிவர் -மாநாட்டில் ..

உரைத்துச் சொல்லுங்க நின்று ..!!!


இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!

வகை (4) புதுகவிதை போட்டிகள்! வளர்ந்து வரும் உலகில் பண்பாட்டின் தேவை!
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன் 

-கரூர்பூபகீதன் -