click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text
Showing posts with label வலைபதிவர் திருவிழா போட்டி. Show all posts
Showing posts with label வலைபதிவர் திருவிழா போட்டி. Show all posts

29 September 2015

வீணாகும் உணவுப்பொருட்களில் ஒளிந்திருக்கும் விபரீதம்!



"மேல் காணும் படத்தில் உள்ளதுபோல் பரிமாறப்படும் உணவுப் பதார்த்தங்களை ஒருவரால் மீதம் வைக்காமல் சாப்பிடமுடியுமா? ஒருவர் எவ்வளவு பசியில் இருந்தாலும் உண்ணமுடியாது என்பதே உண்மை! அவ்வாறு மீதமாகும், அல்லது வீணாகும் உணவுப் பொருட்களினால் உண்டாகும் விபரீதம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நம் ஆடம்பர ஆசையாலும், அலட்சியத்தாலும்  உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 இலட்சம் டன் சமைத்த உணவுப்பொருட்கள்  குப்பையில்
கொட்டப்படுவதாக ஐநா சபையின் புள்ளிவிவரம்
அதிர்ச்சியளிக்கிறது!

ஒரு வேளை உணவுக்கூட , சரியாக கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் உலகம் முழுவதும் 140கோடி பேர்
சர்வதேச வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் அறிவிக்கிறது!

நாம் ஒவ்வொரும் ஒரு கைப்பிடி அளவு உணவினை சேமித்தால், பசி காரணமாக இறக்கும் 5வயதுக்குப்பட்ட சுமார் 90இலட்சம் குழந்தைகளை காப்பாற்றிவிடலாம்!

"தனிஒரு  வனுக்கு உணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம் "-என்று உணவு கிடைக்காமல் வறுமையில் வாடுபவனை கண்டு பாரதி கவிஞன் பாடிய பாடல் இது! ஆனால்

இன்று மீதமாகும் உணவுப் பொருட்களால்தான் ஜகத்தினை அழித்துவருகிறோம், என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை.

1947ம் ஆண்டிண் உலக மக்கள் தொகை 300மில்லியன்கள்! இன்று 1210மில்லியன்கள்.

ஒருபுறம் பசியால் வாடுவதும் மறுபறம் விளைந்த தானியங்களும் காய்கறிகளும் டன் கணக்கில் யாருக்கும் பயன்படாமல் வீணாகின்றன! சமைக்கும்
உணவில் 3ல்ஒரு பங்கு குப்பைகளில் கொட்டப்படுகின்றன!

அவ்வாறு வீணாகும் உணவுப் பொருட்களினால் உண்டாகும் மீத்தேன் வாயுதான் பருவநிலை மாற்றத்திற்கு மிக மிக முக்கிய தீங்கு விளைவிக்கிறது!

காற்றில் கரியமில வாயு அதிகரித்து பசுமை விளைவில் மாற்றம் ஏற்படுவதால் பூமிக்கு அருகில் உள்ள வளிமண்டலம் வெப்பமடைவதே புவி வெப்பமாதல் என்கிறார்கள்!!

வீணாக்கும் உணவுப் பொருளாலும் ,காய்கறி பழங்கள் போன்ற பொருட்கள்
அழுகுவதாலும் ,காற்றில் நைட்ரஜன் ஆக்ஸைடு அதிகரிக்கும்!

வீடுகளில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் "குளோரோ ஃப்ளோரோ கார்பன் "என்ற வாயுவும் வளிமண்டலத்தை அதிகம் பாதிக்கின்றன.

  வளிமண்டலத்தை அதிகம் பாதிக்கும் போது அமில மழை உண்டாக்க  காரணமாகின்றன .

வெப்ப காற்றின் பருவநிலை மாற்றத்தினால் பலவிதமான நோய்கள் வரும்!

மீத்தேன் ,கரியமில வாயு நைட்ரஜன் ஆக்ஸைடு, ஆகியன ஒன்றாக இணையும் போது ஏற்படும் வேதிவினையின் காரணமாக பவளப்பாறைகள் நிறம் அழிந்துவிடும், அடிக்கடி வறட்சி உண்டாகும், காடுகளில் தீவிபத்து ஏற்படும், பனிப்பொழிவு உண்டாகும்!

மீத்தேன் அளவு அதிகமாக கடல் மட்டம் உயர்ந்து  கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்!

வாகனங்களால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் விவசாயப் பொருட்களாலும் வீணாகும் உணவுப் பொருட்களாலும் உண்டாகும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாகும்.

மனிதனின் உணவுத்தேவையை பூர்த்திசெய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான தாவரங்களும் உயிரனங்களும் அழிக்கப்படுகிறது!
அதன் கழிவுகளை முறையாக பாதுகாப்பாக மறுசுழற்சி செய்ய முறையான வழிகள் ஏதுமில்லை
பருவநிலை மாற்றத்தினால் பல சிற்றுயிர்கள் முதல் மனிதன் வரை அதன் உணவுச் சங்கிலியில் மிதமிஞ்சிய மாற்றம் உண்டாகும்
100கிராம் பட்டு நூல் தயாரிக்க 1500பட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.

நம் பணத்செருக்கின் பலனாக பல்வேறு விசேசங்களில் ஒருவர் சாப்பிடுவதற்கு ஐந்தாயிரம் செலவு செய்கிறோம்!அளவுக்கு அதிகமான உணவுப்பொருட்களை அறியாமையால் வீணடிக்கிறோம்!
 
அன்றைய காலங்களில் வருடம் மும்மாரி மழை பொழிந்து விவசாயிகளும் செழித்து வளர்ந்து வந்தார்கள்! இன்று பருவநிலை மாற்றத்தாலும் சுற்றுச்சூழல்,சீர் கேட்டாலும் வானம் பார்க்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டோம்,என்பதை நாம் அறிய வேண்டாமா?

இன்றைய நவீன யுகத்தில் , அசுர வளர்ச்சியில் "பழையசோற்றை பார்க்காத ,உண்ணாத "புதுத்தலைமுறைகளை அல்லவா உறுவாக்கிவருகிறோம்!

நாம் வீணாக்கும் ஒவ்வொரு  உணவுப் பருக்கைக்குப் பின்னாலும் இந்த உலகம் பருவநிலை மாற்றத்தாலும் சுற்றுச்சூழலாலும் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது, அழித்துவருகிறோம் என்பதை அறிந்து கொள்வோம்!

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்  தோரோ -என்பது சாத்தனார் வாக்கு,

உணவுக் கொடுக்கும் இந்த உலகுக்கு நம்மால் முடிந்த அளவு உயிர் கொடுப்போம் வாருங்கள்!

அளவாக சமைத்து மிதமாக உண்டு வளமாகமிருப்போம்!
(
படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)
இப்படைப்பு வலைப்பதிவர் சந்திப்பு தமிழ் இணைய கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கிய போட்டிகளுக்காகவே எழுதப்பட்டது
வகை (2) சுற்றுச்சூழல்

இப்படைப்பு என் சொந்த படைப்புதான் என்றும் வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வரும்வரை வெளியாகாது என்றும் உறுதியளிக்கிறேன்

24 September 2015

வண்ண ஆடை ஏற்றுமதிகளும் வளம் அழிக்கும் சாயக்கழிவுகளும் !!


"பிரபல ஜவுளிக்கடைகளில்  10 சதவிகிதம் தள்ளுபடி  விற்பனை என்றதும் குடும்பத்துடன் ஓடுகிறோம்! தள்ளுமுள்ளு ஏற்படுகிற கூட்டத்திலும் அந்ந தள்ளுபடியிலும் தள்ளுபடி வாங்கி ஆடை எடுத்து ஆனந்தப்படுகிறோம்! என்றாவது ஒரு நாள் அந்த ஆடைகளுக்கு பின்னால் இருக்கும் வரலாற்றை தெரிந்து கொண்டது உண்டா?
ஒவ்வொரு ஆடைக்குப்பின்னால் எத்தனை தொழிலாளர்களின் உழைப்பு, இறக்குமதி இயந்திரங்களின் இரைச்சல் ,எவ்வளவு தண்ணீர் வீணாக்கப்படுகிறது ?எத்தனை விதமான ரசாயன கலவைகள் பயன்படுத்தப்படுகிறது  ?கழிவுகளை மறுசுழற்சி எப்படி செய்கிறார்கள்? அதில் நடக்கும் மிகப் பெரிய சமுதாய சீர்கேடு எவ்வளவு என்று தெரியுமா??

ஆதிகாலம் மனிதன் கைகளிலால் ஆடைகளுக்கு சாயமேற்றி விற்பனைக்கு அனுப்பினான் !பிறகு இயந்திரங்களின் அதித வளர்ச்சியில் ஒரு புறம் நூலை கொடுத்தால் மறுபுறம் வண்ண ஆடைகளாக ரகம்ரகமாக விதம்விதமாக தரும் இயந்திரங்களில் வளர்ச்சியடைந்துள்ளான்!

திருப்பூர் ஈரோடு மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் பின்னலாடைகள் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்கிறார்கள் !அதனால் பல இலட்சகணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும்  வருமானம் கிடைக்கிறது! அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது!

நம் கைகளில் கிடைக்கும் ஆடைகள், ஜவுளிக்கடைகளுக்கு  வரும்முன் சுமார் 30விதமான தொழிற்சாலைகளுக்கு சென்று  வரும்! ஒரு நாளைக்கு டன் கணக்கில் உற்பத்தி செய்கிறார்கள், கிலோ கணக்கில் ரசாயன கலவைகள் பயன்படுத்துகிறார்கள் (dyes)  சாய கழிவு நீர் கோடிக்கணக்கான லிட்டர்கள் வெளிவரும் (Effluent water) இதை அப்படியே இயந்திரங்கள் மூலம் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்! இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது !!

சிறு  ,குறு ,ஆலைகளாக திருப்பூரில் 900சாய ஆலைகளும் கரூரில் 250சாய ஆலைகளும் உள்ளன! இந்த ஆலைகள் ஒரு நாள் பயன்படுத்தும் தண்ணீரை காவேரியாறில்  விட்டால் கரைபுரண்டு ஓடும் !குடிநீர் தட்டுப்பாடு இருக்கவே இருக்காது!!

ஆரம்பகாலங்களில் ஆத்தங்கரை ஓரங்களில் மட்டுமே சாய ஆலைகளை அரசு அமைக்க வலியுறித்தியது! காலமாற்றத்தில் சாய ஆலைகள் மிக மிக அதிக அளவில் அதிகரித்ததால் சாய கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்கவும் குடிநீர் தட்டுப்பாட்டை களையவும்  விவசாயத்தை காக்கவும் எல்லா ஆலைகளிலும் மறுசுழற்சி இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது (Reverse osmois system)எளிதாக ROஎன்பார்கள்.

ஒரு ஆடையை வண்ணமாக்கும் ஆலைகளுக்கு "டையிங் (Dying )என்றும் வெறும் வெண்மையாக மாற்றும் ஆலைகளுக்கு "பிளிச்சிங் "(Bleacing) என்றும் பெயர் உண்டு!

ஒரு ஆடை ,வண்ணமாக, மாறுவதற்கு 20மணி நேரங்களும் வெண்மையாக மாறுவதற்கு 16மணி. நேரங்களும் ஆகும்! இப்படி மாற்றமடைய பல விதமான ரசாயனங்கள் சேர்க்வேண்டும்

இந்த சாய கழிவுநீரை சுத்தம் செய்து மறுபடியும் பயன்படுத்துவதற்கு ஏழு, நிலைகளை கடக்கவேண்டும்! அதிலும் மறுசுழற்சி இயந்திரங்கள் அதிக விலை என்பதாலும், அடிக்கடி புரச்சனைகள் ஏற்படுவதாலும், ஆட்கள் பற்றாக்குறையாலும், அதிக அளவு செலவு ஆகுவதாலும், அதிக மாற்று ரசாயனங்கள் தேவைப்படுவதாலும், எந்த ஆலையிலும் முழுதாக சுத்தப்படுத்த மாட்டார்கள்!! முடியாது என்பதும் உண்மை! வேறு வழியே கிடையாது ஆற்றிலும்  கழிவுநீர் வடிகாலிலும்  எப்படியோ விட்டுவிடுவார்கள்.

.தமிழ்நாட்டில் 2000 TDS (total dissolved salt) உப்புதன்மையுடைய நீரில் பயிர்கள் வளரும் அரசு அனுமதித்த அளவும் அதுதான் !ஆனால் ஆற்றில் கலக்கும் சாய நீரானது இந்த அளவுகளுக்கு மிக மிக அதிகமாக இருக்கும்! இதனால்தான் ஆற்றின் வளம் குறைவதுடன் அதனை பயன்படுத்தும் மனிதன் முதல் விலங்குகள் வரை பல தீங்கு விளைவிக்கும் !மனிதர்களுக்கு "ப்ளுரையிடு " தண்ணீரில் அதிகமாக இருந்தால் பற்கள் மஞ்சளாகும் ஆண்மை குறைவும் ஏற்படும் !விலங்குகள் சினையாவதில் பிரச்சனை வரும்! அதன் பாலிலும் நஞ்சு கலந்துவிடும்!  விளை நிலங்களில் கலப்பதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும்! விளைந்த காய்கறிகளிலும் நஞ்சு கலந்திருக்கும்!

"சாய நீரை முதலில் முதல்நிலை சுத்திகரிப்பில் (primary effluent treatment plant) சுத்தம் பண்ண வேண்டும்! இதில் பல வண்ணத்தில் இருக்கும் நீர் சுத்தமாகிவிடும்! அதிலுள்ள கழிவுகளை  பிரிக்க சுண்ணாம்பு,பெரஸ், பாலி, ஆலம்  ஆன்டிஸ்கேலண்ட் ,ஹைட்ரோ குளரிக் அமிலம், டைபார்மர், சோடியம் மெட்டா பை சல்பேட், ஆகிய ரசாயனங்கள் வேண்டும்! (lime, ferrous, poly, antiscalent, hcl acid, dieformour, smps) இவ்னைத்து  ரசாயனங்கள் இருந்தால் மட்டுமே சாய நீர் சுத்தமாகும்!
இந்த நிலையில் சாய நீரின் உப்புதன்மை (tds) சுமார் 7000லிருந்து 9000வரை இருக்கும்!
முதல் நான்கு நிலைகளில் சுத்தமாகி வெளிவரும் கழிவில் கிட்டத்தட்ட உப்பின் அளவு(tds) 55000முதல் 75000ஆயிரம் இருக்கும்! இதில் ஒரு தேக்கரண்டி அளவு கழிவு நீரை 100லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்தால் வாயில் வைக்க முடியாத அளவுக்கு உப்பு கரிக்கும்! ஆக இதை அப்படியே ஆற்று நீரில் கலந்தால் என்னவாகும் என்பதை நினைத்துப்பாருங்கள்!

எவ்வளவு தீங்கு வரும் என்று எண்ணிப்பாருங்கள்!


இதை, கண்கானிக்கும் அரசு மாசு கட்டுப்பாட்டு  (TNBC) வாரியம்    எவ்வளவு கண்கானிப்புடன் இருந்தாலும் , ஆலை கழிவுகள் கலப்பதை தடுக்கமுடியவில்லை விவசாயிகள் குரல் ஓங்கும் போது ஆலைகளுக்கு அதிரடியாக சென்று ஆலை முதலாளிகளை எச்சரிக்கை செய்து திரும்புவார்கள்!இருந்தும் சாய கழிவுகள் கலப்பதை தடுக்க முடியவில்லை ?என்றதும், மறுபடியும் விவசாயிகள் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள்!
நம்மை, நாமே அழித்துவருகிறோம்.அதுதான் உண்மை!

சாய நீரை சுத்தமாக்குவதற்கு இவ்வளவு ரசாயனங்கள் தேவைப்படும் போது ஆடையை வண்ணமாக்குவதற்கு எவ்வளவு ரசாயனங்கள் தேவைப்படும்
லிக்கர் , சல்பர் காஸ்டிக், பெராக்ஸைடு, வெட்டிங் ஆயில் சோடா, ( liquor, salfor,caustic,peroixed,wetting oil)பிறகு ஒவ்வொரு  வண்ணத்திற்கும் ஒரு ரசாயனம், வண்ணத்தை அதிகமாக்க / குறைக்க ரசாயனங்கள், என,20வகைகள் தேவைப்படும்.டன் கணக்கில் உப்பும் (salt) பயன்படும்!

ஐந்தாவது நிலையில் வரும் அதிக கடினமான கழிவு  நீரை (குழகுழப்பாக இருக்கும்) எவாப்ரேட்டர் (Evaporater) என்கிற இயந்திரத்தில் பாய்லர் (Boilar) உதவியுடன் வெறும் உப்பை மட்டும் பிரித்து எடுப்பார்கள்! மிஞ்சும் இறுதி நீரை சூரிய ஒளியில் படும்படி அகலத் தொட்டிகளில் சேமிக்கவேண்டும்! சூரிய ஒளியில் ஆவியாக்குவதற்கு (solar evaporate bond) என்று பெயர்! ஆவியானது போக மீதமிருப்பதை அதிக சக்தி உள்ள மின் மோட்டார் மூலம் பிரித்து எடுப்பார்கள்! இதற்கு சிலட்ஜ் (Sluge) என்று பெயர்! இதையும் கடினமான "தார்பாலின்கள் "கொண்டு மூடி பாதுகாக்க வேண்டும்! இதை 0.1கிராம் அளவு கழிவை 1லிட்டர் தண்ணீரில் கலந்தால் முழுவதும் நஞ்சாகிவிடும்! இதை குடித்தால் மனிதன் மற்றும் விலங்குகள் விவசாயம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணருங்கள்!

ஒவ்வொரு சாய ஆலைகளிலும் டன் கணக்கில் சேமிக்கப்படும் இந்த "சிலட்ஜ் "என்கிற கழிவுகளை முறையாக மறுச்சுழற்சி செய்ய இதுவரையில் எந்த மாற்று வழிமுறைகளும் கண்டுப்பிடிக்கப்படவில்லை!

பரிசோதனை முயற்சியாக சில "சிமெண்ட் "ஆலைகளிலும் செங்கல் ஆலைகளிலும் முயற்சித்துப்பார்த்தார்கள்.
பயன் ஏதும் கொடுக்காததால் முயற்சி கைவிடப்பட்டது!

   எனவே "சிலட்ஜ் "எனும் கழிவுப் பொருளை அரசு வழிகாட்டுதலுடன் தேவைக்கேற்ப அகலமாக பள்ளங்கள் ஏற்படுத்தி சுற்றிலும் "கான்கிரிட் "சுவர்கள் அமைத்து அதனுள் சிலட்ஜ் களை நிரப்பி மூடிவிடுவார்கள் இதற்கு SLF என்று பெயர் (Safty land filling)

திருப்பூரில் அனைத்து சாய ஆலைகளுக்கும், L&T, (larsan&duproo) என்ற நிறுவனம்தான் தண்ணீர் வழங்கும்!

இந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்காமல் யாரும், எவரும், அவர்தம்
சொந்த நிலத்தில் கூட ஆழ்துளை,கிணறு மூலமோ? அல்லது வேறு வகையிலோ,ஒரு  சொட்டு நீரையும் எடுக்கமுடியாது!

அவ்வப்போது விவசாய தேவைகளுக்கும் குடிநீர் தேவைகளுக்கும், திறந்து விடும்  ஆற்று நீரையும், ஆலைமுதலாளிகள்
ஆறுகளின் ஒரத்தில் "வட்ட கிணறுகள் "அமைத்து உறிஞ்சிவிடுவார்கள்?
அதனால்தான் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை? என்று விவசாயிகள்   போராடுவார்கள்! அதற்கு இதுவும் ஒரு காரணமாகும்!

காலங்காலமாக, இந்த அவல நிலை தொடர்ந்து
வருகிறது! மறுபுறம் அதிகரித்துக்கொண்டும் வருகிறார்கள்!
மனிதர்களின் போராசை,என்று ஒழிகிறதோ அன்றுதான் விடிவுகாலம் பிறக்கும்!

நீர்வளங்களை காப்பதற்கு அரசு பல கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தவேண்டும்!

ஆலை நிறுவனங்களும் வழிமுறைகளை கடைப்பிடித்து மறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும், இதுவே
முழுமையான தீர்வு ஆகும்!

நாம் செய்யவேண்டியது வருங்கால சந்ததிகளுக்கு பணத்தை சேமிப்பதை விட சுத்தத்தையும் சுகாதர விழிப்புணர்வையும், கற்றுதருவதே நாம் செய்யும் உண்மையான பங்களிப்பாகும்!

ஏற்றுமதியாகும் ஒவ்வொரு ஆடைகளுக்குப்பின்னாலும் நம் வளம் அழிந்து வருகிறது,அழித்துவருகிறோம், என்பதை தெரிந்து கொள்வோம்!!


(பட உதவி -இணையம்)

இப்படைப்பு வலைபதிவர் சந்திப்பு -தமிழ் இனணய கல்வி கழகம் இனணந்து நடத்தும் "மின்தமிழ் இலக்கிய பபோட்டிகள் களுக்காகவே எழுதப்பட்டது!

வகை (2) சுற்றுசுழல் விழிப்புணர்வு
இவை என் சொந்த படைப்புதான் என்றும் வேறுஎங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வரும்வரை வேறெங்கும் வெளியாகாது என்றும் உறுதியளிக்கின்றேன் !நன்றி