click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text
Showing posts with label சில்லறைத்தனமான சிந்தனைகள். Show all posts
Showing posts with label சில்லறைத்தனமான சிந்தனைகள். Show all posts

24 October 2015

ஆண்ராய்டு திருமணங்கள் ....(சி சி 2)



"இன்று திருமணங்கள் சொக்கத்துல நிச்சயக்கப்படுதா? இல்லையானு எனக்கு தெரியாது! ஆனால் ஆண்ராய்டு போனால நிச்சயக்கப்படுதுனு ஆணித்தரமா என்னால் சொல்லமுடியும்! 

இதுவும் நேற்று நடந்த சம்பவம்தான்!

"என் வீட்டருகில் இருக்கும் ஒரு குடும்பத்தில் நடந்தது! 18வயது நிரம்பாத அந்த பெண் அவர்கள் வீட்டில் தங்கி ஒரு பாலிடெக்னிக்கலில் முதல் வருடம் படித்து கொண்டிருந்தாள்! இந்த பெண் ஆறுமாதமாக இவர்கள் வீட்டில் இருப்பதுகூட எனக்கு தெரியாது! அவ்வளவு அடக்கமான பெண்ணாம்! அவர்கள் வீட்டில் இந்த பெண்ணுக்கு என்ன காரணமோ, மாப்பிள்ளை பார்த்துவிட்டார்களாம்! கூடவே காஸ்டிலி செல்லும் மாப்பிள்ளைகாரன் வாங்கி தர எந்நேரமும் பேச்சு பேச்சுதான் !விடிய விடிய போசினாலும் இவர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை! ஒருவேளை "உரிமையானவுடன்தானே பேசுறா என்று விட்டுவிட்டார்கள்! இதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டில் உடனே திருமணத்தை நடத்த வேண்டும் என்றதும் பெண் வீட்டுக்குகாரக்களுக்கு சந்தேகம் வந்து "உங்க சம்பந்தமே வேணாம் என்றிருக்கிறார்கள்! இந்த விசயத்தை இந்த பெண்ணிடம் சொல்ல எதையும் வெளிக்காட்டாமல் "அப்படியா ரெம்ப சந்தோசம் "என்றவள்? அந்த செல்லை கிழே போட்டு உடைத்துவிட்டாள்! என் பக்கத்துவீட்டுகாரர்கள் அந்த பெண்ணை உச்சிமுகர்ந்தார்கள் "ரெம்ப நல்லவளா இருக்கா "என்று என் மனைவிகூட சொல்லி  புல்லறிக்க வைத்தாள்!

நேற்றுதான் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்துச்சு!

ஊருக்கு போயிட்டு வர்றேனு போனவா நேரா மாப்பிள்ளை வீட்டுக்கு போயிட்டாளாம் 

படிக்கிற பெண்ணுக்கு திருமணம் நடத்தவேண்டும் என்று யார் செய்த தவறு


படித்து முன்னேற வேண்டும் என்று இன்றைய பெரும்பாலான பெண்கள் இருப்பதில்லை!

திருமணம்செய்து பிள்ளைகள் பெருவதே பலர் சாதனையாக நினைக்கிறார்கள் என்பதுதான் உண்மை!

"மாப்பிள்ளை பார்த்து பெற்றவர்கள் தவறுதானே!
அதிலும் செல் தந்து பேச சொன்னது முட்டாள்தனம்! அதைவிட கண்டிக்காமல் இருந்தது பெரும் தவறு!

எல்லா தவறுகளையும் பெற்றவர்கள் செய்தாலும் இந்த வயதில் திருமணத்திற்கு என்ன அவசரம் என்று அந்த பெண்ணுக்கு யாரும் சொல்லவில்லை!


18வயதிலேயே திருமண ஆசையை வளர்த்தது யார்! சினிமா சமுக தளங்களுக்கும் இதில் பங்கு உண்டு! 
அறியாத வயதில்  தெரியாமல் செய்யும் செயல்கள் என்னமாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்!! 

"ஆண்ராய்டும் அவமானத்தை தரும்
அழிவையும் தரும்
நம்மிடமிருக்கும் சில்லறைத்தனமான சிந்தனைகளில் இதுவும் உண்டு!!!

நன்றி!!! 

23 October 2015

கீழ்கண்டவற்றுக்கு ஆட்கள் தேவை ..?(சி சி ..1)



"நேற்று என்னுடன் வேலைபார்க்கும் நண்பர் தன் கைபேசியில் இருந்த ஒரு விடியோ "வை காண்பித்தார்! அதை பார்க்க பார்க் அதிர்ச்சி! அதிர்ச்சி என்பதை விட இந்த மனித சமுகம் எதை நோக்கி போகிறது என்ற கேள்விதான் எழுகிறது! மனித மனம் இன்னும் நல்ல முறைகளுக்கு மாறவில்லை வக்கிற எண்ணங்களால் நிரம்பியிருக்கிறதா என்பதை நிருபிக்கும் செயல்தான் நான் வீடியோவில் பார்த்தது?


அந்த வீடியோவில் இருந்தது ....


"நகரின் முக்கிய நான்கு வழிசந்திப்பில்  பலவித வாகனங்கள் வருவதும் போவதுமாக இருக்கும் நேரத்தில். திடீரென்று ஒரு பெண் கைகளை விரித்தவாறு எதிர் வரும் வாகனங்களை நிறுத்த "டேய் ...த்தா "வண்டிய நிப்பாட்டுடா "என்று மறிக்கறார் வண்டியோட்டிகளில் சில அதிர்ச்சியாகி நிப்பாட்டிவிடுகிறார்கள்! சிலர் "எது நடந்தா எனக்கென்ன என்று விரைகிறார்கள்? அந்தப்பெண்ணுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? என்று நீங்கள் நினைக்கலாம்! உண்மைதான் அறிவை மழுங்கடிக்கும் மதுவை குடித்து சீரழிந்தால் பைத்தியம்தானே! அந்த பெண்  இல்லை குடும்ப தலைவி போல இருந்தாள், நிலைகொள்ளமுடியாத போதையில் என்ன செய்கிறோம் என்பதை சிறிதும் உணரமுடியாத நிலையில் இருந்தாள்! ஒவ்வொரு  தடவையும் வாகனங்களை நிப்பாட்ட முயற்சிக்கும் போது கீழே விழுந்தாள்! அவள் கூட இருந்தவன் அது கணவனா? கள்வனா தெரியாது "அடியே ஏன்டி இப்படி செய்யிற "என்று தலையில் அடித்துக்கொண்டு அவளை இழுப்பதும் பிடிப்பதுமாக இருந்தான்! அவள் கட்டியிருந்த சேலை நலுவியதுகூட அவளுக்கு தெரியவில்லை! அவள்கூட இருந்தவன் எவ்வளவோ கெஞ்சியும் அவள் கேட்கவில்லை, கேட்கும் நிலைமையுலும் இல்லை! பாவாடையுடனும் ஜாக்கட்டுடனும் அவள் மறுபடியும் வண்டிகளை நிப்பாட்ட முயற்சித்தாள்! அங்கு கூடியிருந்த எந்த ஆணும் சரி பெண்ணும் சரி அவளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை! அவள் மார்பகம் தெரிய ஆரம்பித்ததும் நல்ல மனம் படைத்த சிலர் தத்தம் கைபேசிகளில் படம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் 


"அப்படி பிடிக்கப்பட்ட வீடியோவைத்தான்  நான் பார்த்தேன்! நண்பரும் சிறிதும் வெட்கம் மானம் சூடு சுரனை எழுதுமில்லாமல் தன் வண்டியை நிப்பாட்டி விட்டுத்தான் இதை பிடித்திருக்கிறார்?

இதைவிட ட்ராபிக்கை சரிசெய்த பெண் காவலர் எதையும் தாம் பார்க்கவில்லை என்று இருந்ததை என்ன சொல்வது என்றே தெரியில்லை 

"இப்படி வக்கிர புத்தி கொண்டவர்கள், நடுசாலையில் அவர்கள் உறவுகள் நடந்துகொண்டிருந்தாலும் படம் பிடித்திருப்பார்களோ? என்னவோ?

மனித மனத்தில் ஒரு துளிகூடவா மனிதன்மை இல்லாமற்போய்விட்டது?? அந்த பெண் நிஜ வாழ்வுக்கு திரும்பினால் "நீ இப்படி நடந்துவிட்டாய் "என்றால் அவளுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்ததா?

தெரியாமல் செய்வது தவறு என்றால் தெரிந்தே செய்த ஈரமில்லாதவர்களை என்ன செய்வது???

இப்போதைய. சூழ்நிலையில் பிறக்கும் சிசுவுக்குதான் "போதை பழக்கம் இல்லையோ?

அதற்கும் கூடிய விரைவில் பழக்கப்படுத்திவிட்டுத்தான் மதுவை ஒழிப்பார்களா?

"இப்படிபட்ட கீழ்த்தரமான, மட்டமான, சில்லறைத்தனமான சிந்தனைகளை எப்போது நாம் உணரப்போகிறோம்!! 

குறிப்பு (அந்த வீடியோவை என் கைபேசியால் இணைக்கமுடியவில்லை எப்படியும் வாஸ்அப் "பில் வரும் பாருங்கள்)

நன்றி 

17 September 2015

புள்ளி விவரப் புலிகள்!!




   "இலவசமா கொடுத்த ஆடு எவ்வளவு புல்லு திண்னது, புலுக்கை  போட்டது? மாடு எவ்வளவு பால்பால் கறந்ததுனு "புள்ளிவிவரம் சொல்லி புல்லறிக்க வைக்கும் புள்ளிவிரவ புலிகளிடம் சில "டவுட்ஸ் ""


"ஓட்டு போட்ட. தொகுதி முழுவதும் இதுவரை எத்தனை அமைச்சர்கள் சுத்திவந்திருக்காங்க??

"சம்பளத்திற்கு மேல் ஒரு பைசா சம்பாதிக்காத அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் எத்தனை பேர்????

"வருமானம் வராது என்று "சொல்லி பஸ் விடாத கிராமம், ஊர்கள் எத்தனை???

"பால் குடி மறவாத பாலகரர்களை குடிக்க வைத்து குட்டுசுவராக்கியது எத்தனை பேர்????

"ம்மா ஆட்சியில் இதுவரை எதற்கும் போராட்டம் பன்னாத? சங்கம் மன்றம் கட்சி எத்தனை???

""குளங்களிலும் விவசாய நிலங்களிலும் அனுமதி அளித்த அப்பார்ட்மெண்ட் எத்தனை???

""மக்கள் பணத்தில் லஞ்சம் வாங்காமல் கொள்ளையடிக்காமல் "தொந்தியை "பெருக்கியவர்கள் எத்தனை பேர்???

""சீர்மிகு ஆட்சியின் மூலம் "குடும்பம் குட்டி "என்று நிம்மதியாய் இருந்தவர்களில் நடு தெருவுக்கு வந்தவர்கள் எத்தனை பேர்???

"மக்களுக்கு "நல்லது செய்யத்தான் "நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்? வருவோம் "என. தொண்டு செய்ய வந்தவர்கள் எத்தனை பேர்????

"அமைச்சர்களை மட்டும் அடிக்கடி மாற்றிய 
 நீங்கள் அன்றாடம் வேலைக்கு போவர்களை மாற்ற நினைத்த நாட்கள் இருக்கிறதா??? 

""இதுவரை எத்தனை கோடி லிட்டர் கூலிங் பீர் விற்று"குடிமகன்கள் "வயிற்றில் பீரை வார்த்தீர்கள்????

"ஒவ்வொரு அமைச்சரும் "குனிந்த நாட்கள் எத்தனை???

"மேதகு "குமாரசாமி "எதில் சறுக்கினார்???


நன்றிங்க! !அம்புட்டுதாங்க !!!

16 September 2015

கவர்மெண்ட் தண்ணீயும் கர்நாடக தண்ணீயும்!!!!

      "மழை இல்லாததால் ஒரு சொட்டு தண்ணீரை கூட திறக்கமுடியாது? அப்படி திறந்தால் விவசாயிகள் தற்கொலை அதிகமாகும் -கர்நாடக முதல்வர் செய்தி "


"மழை இல்லாததால் என்னாலும் ஒரு கடையை கூட மூட முடியாது  அப்படி மூடினால் பல குடிமகன்கள் பைத்தியமாகவும் சாவு என்னிக்கையும் அதிகமாகும் -தமிழக முதல்வர் வருத்தம் 


"தண்ணீக்காக நாங்க உங்க இரண்டு பேர்கிட்டயும் இன்னும் எத்தனை காலத்துக்கு "கையோந்துவது??? ""இதான் நாங்கள் வாங்கி  வந்த வரமா?? கையோந்துவதான் வளர்ச்சியா?? -பாமர மக்களின் அவலம்



"இதுவரை 24கோடியே 86லட்சம் இலவச ஆடுகள் மக்களுக்கு கொடுத்திருக்காங்களாம்! அதுக 56லட்சம் குட்டிகள் ஈன்றுக்கிறதாம்! மொத்த செலவு 778கோடியாம்!  அப்படினு ஒ.பி எஸ் புள்ளி விவரம் சொல்லியிறுக்கிறார்!!!! 

"28ஆயிரம் கோடிகொடுத்த டாஸ்மாக்கால் இதுவரை எத்தனை குடும்பம் தாலியறுத்தது, பைத்தியமானது ,பரதேசம் போனது, என்என்ற புள்ளிவிவரம் இருந்தால்? அதையும் "அம்மாவின் ஆணைக்கினங்க "ஒப்பிவிங்கள் பார்க்கலாம்!!! 
"இந்தியா முழுவதும் ஒரு நாள் கோலகலமாக கொண்டாப்படும் விநாயக சதுர்த்திக்கு 20000கோடி செலவு ஆகிறதாம் "!

"அன்பு கணபதியே உங்களை கரைப்பதற்கு கூடதண்ணீர் இல்லாமல் திண்டாடுகிறோம்! 
வருணபகவானை நம்பியிறுக்கும் எம் விவசாய மக்களுகாக மழை பொழிய அருள் புரிய கூடாதா???
கவர்மெண்ட் கடைகள் தண்ணீரில் அடித்து கொண்டு போகவும் அருள்புரியுங்கள் !


நன்றி!! ஊக்கப்படுத்தும் உள்ளங்களுக்கு நன்றி!

10 September 2015

இதுவரை செய்தது? செய்யாதது? எப்பவுமே செய்யாதது!!? பகுதி 2

   ""இதன் முன் பகுதி( 8.9.15 )ல் இருக்குதுங்க! அதையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க!!!


""எப்பவுமே செய்யாதது """

      "ஏம்பா ஏற்கனவே "அவங்களுக்கும் நமக்கும் எல்லை தகராறு இருக்கு!! எத்தனைவாட்டி சொன்னாலும் அவங்களும் சரி நீங்களும் சரி கேட்க மாட்டேங்கிறிங்க!! உங்க பிரச்சினைக்காக இதுவரை 200கடிதம் எழுதியாச்சு! நான் கடிதம் எழுத சமயம் பிரதமரு வெளுநாடு போயிடறாரு! இதுக்குமேல நான் என்ன பன்றது சொல்லுங்க!!!! 

"சுப்ரிம் கோர்ட்டு தீர்ப்பு சொல்லியாச்சு? அது அரசிதலிலும் வந்தாச்சு! இந்த கர்நாடகாரன் எம் பேச்சை கேட்கமாட்டேங்கிறான்?? இதுக்கு ஒரே வழி தமிழ்நாட்டுலயும் கர்நாடகவிலிம் நான், நான் மட்டுமே  "முதலமைச்சர "வந்ததான் சரியாயிருக்கும்? என்ன அடுத்த தரம் நீங்கள் செய்வீர்களா?? செய்வீர்களா??? 
 "ஏங்கம்மா உங்களுக்காக எத்தனை திட்டம்மா கொண்டுவர்றது?? அது சரி உங்க தலையில "குலி வேலைக்கும் செங்கல் சுமக்கிற 
வேலைக்கும் போயிதான் பொழைக்குனும்னு
எழுதியிருந்தா? நான் எப்படிம்மா மாத்தறது???? 
"ஏங்கய்யா இன்னம் இந்த மாட்டுவண்டியில விவசாயம் செய்யிறிங்க!! சரியான கூர் இல்லாத ஆள இருப்பிங்க போபோல!!! உங்களுக்காகத்தானே லட்சம் கோடியில மாநாடு நடத்தி பெரிய பெரிய முதலாளிகள் ஆசைபடுறாங்க!! மாட்டுவண்டிய மாத்துங்க!உங்க வசதிக்கு தகுந்தாபோல. நல்ல காரையோ பைக்கோ வாங்கிகிங்க!! என்ன நம்பி வந்திருக்காங்க இல்ல !!!உங்களைய நான் ஓட்டு போபோட மட்டும்தான் நம்புவேன்??  எல்லாத்துக்கும் என்னையே நம்பினா நான் என்ன பன்னட்டும்!!!!


"எல்லா திட்டங்களையும் எதிர்ப்பவர்கள் நாங்கல்ல!
எந்த திட்டமும் எங்களுக்கு வருவதில்லை என்று ஏமாறுபவர்கள் நாங்கள் !!

புது மொழி!!!! குடிகாரன் பேச்சு விடிஞ்சா போபோச்சு!!
குனிஞ்சவங்களின் பேச்சு அது கூட்டத்கூட்டத்தோடு போபோச்சு 





நன்றி ஏதும் குற்ற குறைகள் இருந்தால் மன்னித்து ஊக்கப்படுத்துஙுகள்! நன்றி!!!! 

08 September 2015

இதுவரை செய்தது? செய்யாதது? எப்பவுமே செய்யாதது?????

"நம்ம குடும்பத்துல இதுவரை எனக்கு என்ன செஞ்சு கிழிச்சனு 
கேட்பது வழக்கம்தானே!!

நம்மள ஆள்றவங்கட்ட கேக்க உரிமை
இருக்குதானே? வாங்க கேட்போம்!?!

""இதுவரை செய்தது ""
 தமிழ்நாட்டின் ஒவ்வொரு "சந்து பொந்து 
இண்டு இடுக்கு மூலை முடக்கு "இப்படி எல்லாவற்றிலும் 
தாராளமாக "தண்ணீர் கடையை "திறந்தது??
 என் சீர்மிகு ஆட்சியில் எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் உருண்டு கிடக்கலாம்? என்று "குடி மகனுக்கு 
சுதந்திரம் கொடுத்தது??? 
 கௌரவமானவனை  குடிக்கவைத்து நடு ரோட்டில் தெருவில் சாக்கடையில் புரளவைத்து நாலு பேர் காறி துப்பி 
பாராட்டியது ??
   "இவர்கள் தான் நாட்டின் "கண்கள் " என்றவர்களையும் 
மதுவுக்கு பழக்கப்படித்தி எல்லோர் கண்களையும் குதுகலப்படித்தியது??? 

"நம்ம காசிலியே நமக்கு மிக்ஸி, கிரைன்டர், டீவி னு கொடுத்து மக்களை எல்லாம் புல்லறிக்க வைத்தது??

"ஒவ்வொரு அமைச்சரையும், கோடி கணக்கில் கொள்ளையடிக்கவிட்டு "கமிஷன் தராததாலயொ? சரியாக குனியாததாலோ? "உனக்கு மக்கள் பணத்தை சரியா ?களவாட தெரியல "னு அடிக்கடி அமைச்சர்களை மாற்றியது?? 

"இதுவரை செய்யாதது ""


விவசாயத்தையும் விவசாயிகளையும்
ஏறடுத்து பார்க்காதது 
"படித்த இளைஞர்களுக்கு வேலை அது உன்பாடு "என்று உதாசினப்படுத்தியது??
தினக்கூலிக்கும் வரியவர்களையும் ஆண்டுகணக்காக அப்படியே வைத்திருப்பது???
"எந்த அரசு அதிகாரியையும் மக்களை தேடி சென்று சேவை செய்துவிடாதிர்கள்? என்று பயம்காட்டியது??


நன்றி இன்னும் இந்த பட்டியல் நீளும் நாளை சந்திப்போம்!! ஏதும் தவறு இருப்பின் சுட்டிகாட்டி ஊக்கப்படுத்துங்கள்! நன்றி 

07 September 2015

உங்க ஆள்காட்டி விரல் யாருக்கு??? பகுதி 2

"உங்கள் ஆள்காட்டி விரல் யாருக்கு பகுதி ஒன்றை (5 :09 :15) அன்று பார்க்கவும் நன்றி!!! 

"இவர் கட்சி ஆரம்பித்த புதிதில் "துளியூண்டு எதிர்பார்பு இருந்தது!
முதலில் "மக்களுடன் கூட்டனி "என்றார்! பிறகு கடவுடன் கூட்டனி என்றார்! வழக்கமாக "இலகட்சியில் இனைந்தார்! சட்டசபைக்கு போக அடம்பிடிக்கிறார் !சினிமாவில் நடிப்பது போல! நாக்கை துருத்தி கண்ணை உருட்டுவதாலும்? தமிழ்நாடே இவரைபார்த்து நகைக்கிறது! இவரைபற்றி மீடியாக்களில் மீம்ஸ் வராத நாட்களே இல்லை!! இவர்தான் உங்க சாய்ஸ் எனில்?  மதுவை ஒழிக்க மனித சங்கிலி நடத்தினார்! பிறகு மது படிபடியாகத்தான் ஒழிக்க வேன்டும் என்றார்! பிறகு 21வயசுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மது விற்பனையை ஒழிக்கவேன்டும் என்கிறார்!! இவர் என்னா பேசுகிறார் என்று அவர்க்கும் சரி நமக்கும் சரி இதுவரை புரிந்ததில்லை?? உங்க முடிவு என்ன?? 

நான் முதலமைச்சர் ஆனதும் முதல் கையொழுத்து "மதுவை ஒழிப்பதற்குதான் போடுவேன் "என்று இன்று வரையிலும் வெறும் கையொழுத்தை மட்டுமே பழகி பழகி வருகிறார்! சினிமாவில் எந்த பிடிக்காத கெட்ட காட்சி வைத்தாலும் முதல் எதிர்ப்பு இவராகத்தான் இருக்கும்! மதுவை ஒழிக்கறதுனு வீராப்புடன் சொல்லியிருப்பதால் மனது இளகி இவருக்குதான் உங்க சாய்ஸ் எனில் "அந்தோ பரிதாபம்!! மதுவை ஒழிக்கிறாரே இல்லையோ? தமிழ்நாடு முழுவதும் சாதியை வளத்துவிடுவார் என்பதையும் கவனித்தில் வைங்க!
அப்ப உங்க முடிவு ???

இன்னும் நம்மை ஆள்றதுக்கு நிறைய முதல்வர்கள் ரெடியா இருக்காங்க??
நம்ம விதி இவங்கள நம்பியிருக்கற மாதிரிதானே இருக்கு!! எல்லொரும் மதுவை ஒழிக்கத்தான்  வராங்களாம்!!

இவங்க என்ன ஒழிக்கறது! தன்னால நாங்களே குடிச்சு குடிச்சு ஒழிஞ்சிடுவோம்? இல்லனா பைத்தியமாகிடுவோம் 



நன்றி இது எனக்கு தெரிந்த கருத்துதான் ஏதும் குற்றகுறைகள் இருந்தா சொல்லுங்க நன்றி

05 September 2015

உங்க ஆள்காட்டி விரல் யாருக்கு!!!!

நாம? ஆவலா எதிர்பார்க்கும் தேர்தல் அடுத்த வருடம் வரப்போகுது!!
இப்பவே ஆளாளுக்கு நான்தான் ஆட்சியை பிடிச்சு மதுவ ஒழிக்க போறதா?? பல முதல்வர் வேட்பாளர்கள் வரிசை கட்டி வராங்க!!!

உங்க சாய்ஸ், யாருனு பார்க்கலாம்!!! வாங்க!!
 "குடிமக்களை கொல்வது "மட்டுமே என் லட்சியம், கொள்கை, மூச்சு "னு சிறப்பா ஆட்சி செய்து வரும் இவர்தான் உங்கள் முதல் சாய்ஸ் எனில் "உங்களையும் சரி? குடி "மக்களையும் சரி? யாரும் காப்பாத்தமுடியாது?? (ஏன்னா? அதுக்குள்ள பாதி பேர் குடிச்சே செத்துடுவாங்க) "குடி "குனி "இதான் இவங்களின் தாரகமந்திரம்! குடிமக்களை விட குனிபவர்களைத்தான் இவருக்கு அதிகம் பிடிக்கும்!!! இவங்க 3 விசயம்தான் அதிகமா செய்வாங்க!!  1 "குடிமக்களுக்காக கடிதம் எழுதறது!! விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க செய்வது!! விளங்காம போறதுக்கு தண்ணீர் கடையை திறப்பது!!! 


"வீல் சேர்ல நகர்றாரு, இதான் கடைசி தேர்தலு "னு "பெரியவங்க, வயசானவங்க, யாராச்சும் பரிதாபபட்டு ? இவர்தான் உங்க அடுத்த சாய்ஸ்? எனில் அந்த முன்னூத்தி முப்பத்தாறு தேவர்களும் வந்து கால பிடிச்சு கதறினாலும் "தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது?? இவர் வச்சிருக்க "துளியூண்டு "சொத்த வச்சு கன்னியாகுமரிக்கும் காஷ்மீருக்கும் ? அஞ்சு பஸ் ஒண்ணா போறப்போ
ல? சும்மா பளபள "னு தார் ""ரோடு போடலாம்?? ஏற்கனவே தென்தமிழ்நாட்டை ஒரு தமையனுக்கும் வடதமிழ்நாட்டை ஒரு தமையனுக்கும் பிரிச்சு கொள்ளையடிக்க சொல்லிட்டாரு?? அதுமட்டுமா ஆட்சியில இருக்கறப்பத்தான் 3;4 படத்துக்கு கதை வசனம்  எழுதி!,அந்த மக்கு படத்தையும் ஆட்சிமுடியவரைக்கும் ஹஸ்புல்லா "ஓட்டுவாரு!!! மது ஒழிப்புனு சொல்லியிருக்கார்??? முதலில் அவர் கொள்ளையடிப்பதை நிறுத்தனும்! என் விரலை வெட்டினாலும் இவருக்கு ஒட்டு இல்ல?? அப்ப நீங்க?????



இன்னும் அடுத்த முதல்வர்கள் பற்றிய பதிவு நாளை வரும்!!! நன்றி பதிவு பிடிச்சிருந்தா என்மேல பாவப்பட்டு கருத்து சொல்லிட்டு போங்க!!!!!!

03 September 2015

இவர்களிடம் இந்தியாவை ஒப்படைத்தால்???

*இளைஞர்களிடம் இந்தியாவை
ஒப்படைத்தால்???
முதலில் எந்த அரசியல்வாதிகளும் ஒப்படைக்க தயாரில்லை என்பதுதான் உண்மை! இரண்டாவது எந்த இளைஞர்க்கும் அரசியலில் குதிக்கவும் விருப்பமில்லை என்பதும, உண்மை!!


எனக்கு இந்தியாவின் மற்ற மாநில இளைஞர்களை பற்றி தெரியாததால் நம் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால் என்னாகும் என்பதே இந்த பதிவு!!


நம் இளைஞர்களுக்கு எத்தனையோ !திறமையிருந்தும் !எத்தனை பெரிய பதவிகளில் பணிபுரிந்தாலும்? எத்தனை நாடுகளிலும் பரவி இருந்தாலும்! இந்த
அரசியலில் இல்லாமல் இருப்பது ஏன்???


நாம் கற்காலத்தில் பிறந்து பிறகு பல காலங்களை கடந்து தற்போது "டாஸ்மாக் "
காலத்தில் மயங்கி விழுந்து வாழ்ந்து வருகிறோம் t
படிக்காத பல இளைஞர்கள் தன் குடும்பம் குட்டி, எல்லாம் 
துறந்து டாஷ்மாக்கே "கதி என்று இருக்கிறார்கள்!! படித்தவர்களும் இதில் விதிவிலக்கல்ல!!


30வயதுக்குள் இருப்பவர்கள் தான் இளைஞர்கள் என்று இந்தியாவில் வறைமுறை இருக்கிறது!! ஆனால் 25 வருசமா ஆண்ட இந்த கட்சியில் இவர் மட்டும் 55, 60 வயசுவரைக்கும் இளைஞர்அணி செயலாளராக  இருக்கும் கூத்தை என்ன சொல்வது??? இதில் இளைஞர் அதிகம் கொண்ட கட்சி என்று பீத்திகிறார்கள் 
படித்து பல பட்டம் வாங்கிய. இளைஞர்களுக்கு உருப்படியாக வேலைவாய்ப்பை தருகிறதா?? இந்த அரசு!! ஆரம்ப பள்ளியில் சாதி சான்றிதல் வாங்வதில் இருந்து சுடுகாட்டில் பிணத்தை எறிப்பது வரை லஞ்சம்!! இளைஞர்களுக்கு முன்னுதாரமாக இருக்கவேன்டிய இந்த கிழட்டு சிங்கம் புலி ஆடு அரசியல்தலைவர்கள் படு கிறுக்குதனமாக நடந்து நாறுகிறார்கள்!?


அடுத்து தமிழ்நாட்டில் எந்த கோவிலும் இல்லை!! அதில் சாமியும் இல்லை என்பது போல ' ""இவர் ஒருவர் மட்டுந்தான் குலசாமி  சோதனைகளை தீர்க்க கடவுள்! ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் "கர்சீப் "எனும் சில்லறைத்தனமான சிந்தனையில், குனிந்து கும்பிடி போட்டு தரையில் உருண்டு அக்னி சட்டி எடுத்து?? கூனி குறுகி அழுது புலம்பி வரும் இவர்களை வைத்து கொண்டு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்களை திருத்தவேமுடியாது!!! 
உப்பு சப்பில்லாத விசயத்திற்கு எல்லாம் போராடும் நாம் இளைஞர்களிடம் ஆட்சியை ஒப்படைங்கள் என்று என்றாவது போராடியிறுக்குமா ???

இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை!! இளைஞர்களிடம் மட்டும்தான் ஆட்சியை ஒப்படைத்தால்தான்?

தமிழ்நாடு டாப் ஆக ஆகும்! அரசியலும் அழகாகும!!  இந்தியாவும் வல்லரசாகும்!!!


நன்றி! இவை எனக்கு தெரிந்த கருத்துக்கள்தான் ஏதும் நிறை குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள் நன்றி!!! 










28 August 2015

நாம் எதில் முதலிடம்????

    *யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் 
    
    *மோகன் ப்ருவரிஸ் லிமிடெட்

      *சிவா டிஸ்டிஸ்லரிஸ் லிமிடெட் 

      *எம்.பி டிஸ்டிஸ்லரிஸ் லிமிடெட் 

      *சதர்ன் அக்ரிபுரேன் இன்டஸ்ரிஸ் லிமிடெட் 

      *மிடாஸ் கோல்டன் டிஸ்டிஸ்லர்ஸ் பி லிமிடெட் 

      *எலைட் டிஸ்டிஸ்லர்ஸ் லிமிடெட் 

      *எஸ் என் ஜே டிஸ்டிஸ்லர்ஸ் லிமிடெட் 
   
      *கல்ஸ் டிஸ்டிஸ்லர்ஸ் லிமிடெட் 

       *கோல்டன் வாட்ஸ் பி லிமிடெட் 

       *இம்பீரியல்  ஸ்பிரிஸ் அன்டு ஒயின் பி லிமிடெட் 

       *சென்னை ப்ருவரிஸ்  பி லிமிடெட்

        *அப்போலோ டிஸ்டிஸ்லர்ஸ் பி லிமிடெட் 





இவையொல்லாம்  படித்து திறமை இருந்தும் 

MA. MBA ME BE படித்த லட்சகணக்கானவர்களுக்கு வாரி வழங்கும் வேலைவாய்ப்பு கம்பெனியல்ல 



அல்லும் பகலும் பாடுபட்டு சேமித்த பணத்தை 

அடியேடு கொள்ளையடிக்கும் மது ஆலைகள்!!


தமிழ்நாடு தொழில் தொடங்க. சிறந்த மாநிலமாம் 

இருக்காத பின்னே! 6கோடி மக்களுக்கு மது ஊத்தி 

கொடுக்க 15கம்பெனிகள் 


பாலுட்டும் தாய்மார்பகளுக்கு தனியறை 

கட்டிகொடுத்தது போல.?? குடித்து நடு ரோட்டில் 

வீழ்ந்துகிடக்கும் ஒட்டுபோட்டவனுக்கும் 

ஏதாவது கட்டிகொகட்டிகொடுங்க!!!




நன்றி இவை என் கருத்துகளே!! உங்கள் கருத்தையும் மறக்காம சொல்லிட்டுப்போங்க!!!! 

26 August 2015

பெரிய வெங்காயம்

சரியோ, தப்போ, எதற்கும் போராட்டம் வேண்டும் ,
போராட வேண்டும் என்கிற சீரிய
சில்லறைத்தனமான சிந்தனைகள்
மக்கள் மனதில் வந்திருச்சு!
அந்த போராட்டத்தால நல்லது நடக்கிறது என்றால் முழுக்க முழுக்க இல்லையொன்றுதான்
சொல்லமுடியும்!

இந்த பிரச்சினைக்கு ஏன் இவர்கள் இன்னும்போராட்டம்
ஆர்பாட்டம் பண்னவில்லை என்று எதிர்பார்க்கவும் ஆரம்பித்துவிட்டோம்!?

80ருபாய்க்கு பெரிய வெங்காயம் விலை
ஏறிவிட்டதால் சில உருப்படாத கட்சிகள்
அய்யோ!குய்யோ என்று கத்துகிறார்கள்

இவர்களிடம் ஒரு கேள்வி  பல விவசாயிகள் தான் விளைவித்த பொருட்களுக்கு அரசு சரியான விலை தருகிறதா??

பல சமயங்களில் விலை இல்லை என்று
தக்காளி  போன்ற பொருட்களை வீதியில் சாக்டையில்  வீசிகிறார்கள் ஏன்????
அப்போது இவர்கள் கத்தவில்லை போராடவில்லை???

2ருபாய் பொருளுக்கு இரண்டு மணி நேரம்
பேரம் பேசுபவர்கள் தானே நாம்! ! அல்லும் பகலும் பாடுபட்ட விவசாயிக்கு எப்படி லாபம் தரலாம் என்று நினைப்பவர்கள் இங்கு
எத்தனை!!!

அதிலும் இடைத்தரகர்கள்தான் இடையில்
புகுந்து கொள்ளையடிக்கிறார்கள்

அதுவே நகை கடையில் 100ருபாய் குறைந்தால் துள்ளி குதிப்பதும் 1000ருபாய் ஏறினால் கவலைப்படுவதுதானே நம் சமுக
பழக்கம்


1968ஆம் ஆண்டு ஒரு மூட்டை நெல்லின்
விலை 40ரூபாய், தங்கத்தின் விலை 120ருபாய்
3மூட்டை நெல்லை விற்றால் 1பவுன் தங்கம்
எடுக்கலாம் ?  ஆனால் இப்போதைய நிலைமை என்ன???


அதே நெல்லு 1200ருபாய் ! தங்கத்தின் விலை 20000ஆயிரத்திற்கும் அதிகம்!


எப்படி இந்த ஏற்றதாழ்வு உன்டாச்சு?
எல்லாம் நம் அரசாங்கம்தான் !  அரிசி பருப்பு காய்கறி விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல்
அழகு சாதனப் பொருட்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்த காரணம்தான் இது!! தமிழ்நாட்டில் அரிசி கடைகள் 500
இருந்தால், தங்க கடைகள் 5000 இருக்கும்


தங்கம் இறக்குமதி செய்ய அவ்வளவு கட்டுபாடுகள் இல்லை! ஆனால் இங்கு விவசாயம் செய்ய ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
சொல்லப்போனால் விவசாயம் மெல்ல,, மெல்ல
அழிந்து வருகிறது!!  அடுக்குமாடி வீடுகள்
பெருகி வருகிறது?

உண்ணும் பொருளுக்கு விலை குறைவாகவும்? ஆழகு ஆபரணத்திற்கு
விலை அதிகமாகவும் இருந்தால் ஏன்????
"வறுமைகோடு உண்டாகது???

இந்த முரன்பாடுகளை ஆராயமல்
வறுமையும் ஒழிக்க முடியாது??  இந்தியாவின் வளத்தையும் அதிகரிக்க முடியாது!!!!

நன்றி இவை என் கருத்துகளே உங்கள் கருத்துகளையும் கூறலாம் நன்றி!!!