click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

29 August 2015

கால் கிலோ கவிதைகள்!!

  "ஆத்தங்கர ஓரம் ,
   
    அந்தி சாயும் நேரம்,

   ஒத்தயில. போறவளே .....

   ஒத்த நொடி நில்லே ....."!!


    உம்முகம்  பாத்த ,.....

    கம்பங்காடு தல சாய்க்கும் .....

     உம்   நிறம் பாத்த ......

      சூரியகாந்தி பூ சிவக்கும் ,......!!


       காடு உழும் அய்யனுக்கும் .....

      கழை வாரும் ஆத்தாளுக்கும் .,...

      கஞ்சி கொண்டு  போறியே .....

     எம் பசி  போக்க .....

    எப்ப வருவ ....,!!


     ""பாவட சரசரக்க   ஓடாத ..,

       பருத்தி காடு பாவமடி .,...

      பச்ச புல்லும் நோகுமடி ...""



    ""பருத்தி சீலக்கி பவுசு....

     உன்னால வந்ததடி மவுசு ....""


      ""நீ ஆடு மோய்க் போறியா.,...

        அப்படித்தான்  நினைக்குது ஊரு ....

         எம் மனச மோய்ப்பது

          யாருக்காவது தெரியுமானு பாரு.,...



        ""உனை பாக்கலன .....

         கரும்பு காடு காயுமடி .,..

         கடல செடி கருகுமடி ,....""


        ""எதித்த வீட்டு சிறுக்கி. ....

        எனை பாத்தானு .,...

        கருக்கருவால. தீட்டி ....

         சண்டக்கி போன....கருவாச்சி!! ""


        ""தை பொங்கலன....

         தை தைனு குதிப்ப ....

         மாட்டுக்கு முத. சோறு ,...

         மனிஷனுக்கு மறு சோறு

         ஓரவஞ்சன செய்யாத ....

         பாசக்காரி நீ ..,!!""

     

        ""சலிக்காம வேல இருந்தாலும் ..,..

          சல்லீச செய்வ .,....

         எப்படினு கேட்ட .,...

         மனசுல மச்சான் இருக்கானு ....

        மதர்ப்ப திரியுவ ,....!!""


          ஆத்தங்கர அம்மன்கிட்ட ....

          அப்படி என்ன பேசுவ ,...

            ஒட்டு கேட்டாலும் ,...

           ஒண்னுந் புரியாது எனக்கு ....!!""


          நான் காலேஜ் படிச்சிருந்தும் ....

          கவர்மெண்டு வேலயிருந்தும்

         நாகரிகம்  தொரியாதவனு ....

        தள்ளிவச்சது எந்தவறுடி .,.,!!

 
        ""உன் விவசாய பாசத்திக்கும் ....

         வெள்ளாமை பெருமைக்கும் ,...

         முன் ,....

        என் கவுரவம் கால் தூசடி ,...!!!!!

நன்றி இவை கால் கிலோ கவிதைகள் எனும் நான் எழுதிய. பதிப்பின் மறு பதிவு  எழுதிய ஆண்டு 2005
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் நன்றி?!!!!