click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

10 October 2015

நான் செய்த தவறுகள் ....!




"நம் பதிவர் சந்திப்பு +தமிழ்இணைய கல்வி கழகம் நடத்திய போட்டிக்கு நானும் என் அறிவுக்கு எட்டிய கருத்துகளை கட்டூரையாக எழுதி அனிப்பினேன்! அதில் நான் செய்த தவறுகளை விளக்கவே இந்த பதிவு! நான் சொல்லியுள்ளவற்றில் ஏதும் தவறிந்தால் தயங்காமல் தெரியப்படுத்தினால் இனி வரும் காலங்களில் தவறை திருத்திக் கொள்வேன்!

.நான் செய்த தவறுகளாக என் நண்பர்கள், என் இல்லாள் மற்றும் நான் நினைப்பது! இதில் யாரையும் குறை சொல்லியோ, போட்டி மனப்பான்மையிலை இதை எழுதவில்லை! 

அது போல நான் மற்றவர்களை விட அருமையாக எழுதிவிட்டேன் என்றும் அடுத்தவர்கள் சரியாக எழுதவில்லை என்றும் பொறாமை எண்ணத்திலும் இதை எழுதவில்லை  !
என் அறிவிற்கு எட்டாத விசயங்களை உங்களிடம் அறியவே இந்த பதிவு!!! 

மேலும் என் வாழ்நாளில்   கணினியில் எழுதிய முதல் படைப்பு!

1*இந்த துக்கடா கைபேசியில் எழுதியது!
அதனால் பல எழுத்து தவறுகள் வந்தது!
போட்டிக்கு அனுப்பிவிட்டு திருத்தியது!
விதிமுறைகளை சரியாக கவனிக்காமல் (ஆர்வகோளாறு) போட்டுக்கு அனுப்பிட்டு இடையில் சில கருத்துகளையும் வாக்கிய அமைப்புகளையும் திருத்தி எழுதியது!

கைபேசியில் எழுதியதால் பதிவு கணினியில் பார்க்கும் போது எவ்வாறு தெரியும் என்பதும், பதிவின் நீளம் எவ்வளவு என்பதும் எனக்கு தெரியாது  

2*எல்லார்க்கும் தெரிந்த விசயங்களில் அதில் தெரியாத விசயங்களை மட்டுமே எழுத வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன்

*யார்க்கும் தெரியாத விசயங்களை எழுதவே கூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன்!

 *3*போட்டி நடத்துவது தமிழ் இணைய கல்வி கழகம் என்பதை மறந்து அரசைப்பற்றி சில தவறான கருத்துக்களை எழுதியும் போட்டிக்கு அனுப்பிய பிறகு திருத்தியது தவறு என்பதை இப்பொழுது  உணர்ந்துவிட்டேன்!


ஒருவர் படிக்கும் போது அவர் எதிர்பார்த்த  பாதிப்படைய கூடிய கருத்துக்கள் இருக்கவேண்டும், புரியாத விசயங்களை எழுதகூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன்! 

*4*விதிமுறைகளை மீறிய படைப்பாக இருந்தாலும் அது நல்ல கருத்தாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்பதையும் உணர்ந்து கொண்டேன்!

ஒவ்வொரு படைப்பையும் தேர்ந்தெடுக்க அதன் துறை சார்ந்த வல்லுனர்கள் தேவையில்லை? பொதுவாணவர்கள் போதும் என்பதையும் தெரிந்து கொண்டேன்!
தலைப்புக்கு பொருத்தமில்லாத படைப்புகளை எழுத கூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன்!

ஒரு படைப்பை எந்த கண்ணேட்டத்தில் பார்க்கவேபார்க்கவேண்டும் என்பதும் எனக்கு தெரியாது!

வழக்கமாக கருத்துரை இடுபவர்கள்,பாராட்டுவதைவிட குறைகளை கூறி வழிகாட்டுங்கள்!

வழக்கமாக என் தளத்திற்கு வந்து கருத்துறை இடுபவர்களை இப்படு நான் பதிவிட்டு இருப்பதால் எனக்கு பொறாமை என்றோ ஆதங்கம் என்றோ தயவு செய்து நினைக்க வேண்டாம்!

என் தவறு சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வே!

ஏனென்றால் சிலர் சிலபல ஆண்டுகளாக எழுதிவருகீர்கள்
அதனால்தான் உங்களிடம் என் கருத்தை அறிய விழையும் முயற்சியே இந்த பதிவு!

நன்றி!