click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

18 October 2015

செய்திகள் வாசிப்பது .....!?













""வணக்கம் 

செய்திகள் வாசிப்பது வீணாப்போன வீரமுத்து ..

"குளத்துபாளையத்தை சேர்ந்த குனசீலன் குளத்தில் குளித்து கொண்டிருந்த போது கோமனத்தை காணவில்லையாம், அதை கண்டுபிடித்துதருபவர்களுக்கு கோமனத்தில் பாதி பரிசாக தரப்படும் 

"திருச்சி கரூர் நெடுந்சாலையில், 80கிமீட்டர்  வேகத்தில் எதிர் எதிர் வந்த இரு கார்கள் மோதிக்கொண்டதில், கார் மட்டும் பாப்புலர் அப்பளமானது அதில் பயனம்செய்தவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை? காரணம் அது பொம்மை கார்களாம்?

"சுமதி என்பவரும் பூபதி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனராம் காதலித்த விசயம் இருவீட்டாருக்கும் தெரிந்து பயங்கர காமெடி ஆகிவிட்டதாம், இந்த அவமானம் தாங்காத காதல் சோடிகள் இருவரும் நேற்று முன்தினம் அழுதுவாறே திருமணம் செய்தார்களாம், இந்த அதிசிய சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது 


"தூங்கிகொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் மகனை நான்கு கொழுத்த கொசு கடித்துவிட்டதாம், அதனை பிடிக்க எட்டு தனிப்படை அமைத்து தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையில் அதிரடி சிரிப்பு படை இறங்கியுள்ளது 


"நாலறை ஆண்டுகளாக மக்களுக்கு ஓடியாடி வேலை செய்து களைத்துவிட்டதால் தமிழக முதல்வர் ரெஸ்ட் எடுக்க சென்றிருப்பதால் குனிந்த அமைச்சர்களுக்கு சில நாட்களாவது ஓய்வு கொடுக்க விரும்புவதாக அரசு செய்திகள் தெரிவிக்கிறது,


"வழக்கம்போல மழை வரும் என்று விவசாயிகள் நம்புங்கள், வழக்கம்போல ஏழைகளுக்கு தங்க விலையில் மாற்றம் இல்லை, வழக்கம்போல மீண்டும் செய்திகள்..


மீண்டும் செய்திகள் வரும் ஞாயிறு அன்று ,வணக்கம் நன்றி!! 

17 October 2015

எங்க ஊருக்கு வராதிங்க ...!



"நடக்க நல்ல பாதயுமில்ல..

நாட்டாமைக்கு நேரமேயில்ல...

நாலு தெரு நாப்பது வீடு ..

குடிக்க சொட்டு தண்ணியுமில்ல...!


"தெருகூத்து வண்ண. டீவிக்குள்ள ..

குடும்ப சண்ட நடுவீதியில ,

குறுதுக்குள்ள நெல்லுமில்ல..

கூலிக்கு போக வேலயுமில்ல..!


"அம்மி ஆட்டுக்கல்லு  பழசாச்சு ..

அரசு கொடுத்ததெல்லம் 

கெளரமாச்சு ,..


"பச்சயா இருந்த ஊரு ..

பசலபுள்ள சீக்காச்சு ...

பந்தி வச்ச. பழக்கம் ...

பாக்காம திண்ன வழக்காச்சு ...!


நீங்க எங்க ஊருக்க வரவேணாம் 

எப்படி வாழறோம்னு பாக்கவாங்க.,!!!


நன்றி!!! 

16 October 2015

சிரிக்க சிந்திக்க சில பொது அறிவு கேள்விகள்,..4


"1* 2016ல் ஆட்சியை பிடிப்பது யார்??
விடை 1)ஓட்டா 2).நோட்டா 3)நோட்டாவா?

"2*அதிக நாடுகள் சுற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? ?
விடை 1)அன்னிய முதலீடு 2)செல்பி 3)இலவச பயணம் 

"3*ஆண்ராய்டு ஆப் "க்கும் அரசியல் ஆப்புக்கும் என்ன வித்தியாசம்??
விடை 1)இலவச மா டவுண்லோடு பன்னுணா ஆண்ராய்டு ஆப் 
2)இலவசம் கொடுத்து ஆட்சிய புடுச்சா அரசியல் ஆப்பு 
3)நெட்  இருக்கறவரைக்கும்  ஆண்ராய்டு ஆப் வேல செய்யும்
4)துட்டு இருந்தத்தான் அமைச்சர்கள் வேல செய்யும் 

"4*எல்லா விசயங்களுக்கும் ஒரு நாள் இருக்கிறது இளைஞர்கள் எழுந்திரிக்க நாள் வருமா ??
1)இளைஞர்கள் எழுந்திருச்சாத்தான் வரும் 2)தண்ணிகடை ஒழிஞ்சாத்தான் வரும் 3)இளைஞர்கள் அழிஞ்சாத்தான் வரும் 4)காதல் காணாமப்போனா வரும் 

"5*பண்பாடு முரன்பாடு வேறுபாடு என்ன??
விடை 1)கவித எழுதனும் கமென்ட்ஸ் போடகூடாது 2)தமிழேனு உயிர விடனும், நேர்ல இங்கிலீஸ்லதான் பேசனும் 3)அருமைனு சொல்லுவாங்க, அவங்க சிறுமை தெரியாது 
4)வாழவைக்கறது தமிழ்நாடு, வளமில்லாம இருக்கிறதும் கண்கூடு!!!!


நன்றி சரியான விடையை சொல்லுங்க 


15 October 2015

வரவேற்பு வூணர்கள் ....!!



"நமக்கு நாமே "னா அர்த்தம் தெரியுமா? உங்களுக்கு! 
எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சச்சு!
ஆமாம் நமக்கு நாமே வைச்சு "கொள்ளும் "ஆப்புக்கு பெயர்தான்  அது! அம்புட்டு ட்ராபிக்கு "நகரமுடியலை, ஆளாளக்கு கண்டத பேசுறாய்ங்க ,
கட்சிகாரங்க மட்டும் அவரு பேச்ச கேட்டு சும்மா ஆர்ப்பறிக்கறாங்க?
பொது மக்களை சந்திக்கிறதுனா? அவர்க்கு யார்யா? சொன்னது பஸ்ஸ்டாண்டுலதான் இருப்பாங்கனு?
எதிர்கட்சிய அள்ளி தெளிச்சு வீசுனாறு ஆனாலும் ஆளும்கட்சி காவல்படை தேமே புளிமேனு, இருந்துகிட்டு நடந்து வந்தவங்களையும் போனவங்களையும் "ம் "அப்படி போ இப்படி வா 'னு பவரை காமிச்சாங்க!


"இந்த காவல்படை ஒண்ணு "....மாவுக்கு பாதுகாப்பு தர்து? இல்லனா எதிர்கட்சி கோமாளிகளுக்கு பாதுகாப்பு தர்து? இந்த பொதுமக்களுக்குத்தான் "தனிப்படையும் " "தண்ணீர்கடையும் இருக்கே?


"ஏங்க நம்ம ஊர்ல வேல வெட்டி வீணர்கள் எவ்வளவு பேர்னு கணக்கு தெரியுமா?

ஆபிஸ் வர்றதக்குகூடவா? வழிநெடுக கும்பிடு போடனும்?

ஒரு அரை மணி நேர வரவேற்புக்கு குலைகலையா? எத்தனை வாழைதார் வாடி வதங்குது, விவசாயிகள் அரும்பாடு பட்டு விளைவிக்கிறது உங்க வரட்டு நல்லபெயர் எடுக்கவா?

"தமிழ்நாட்டுல இன்னும் எத்தனை ஊர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லைனு என்னிக்காச்சும் நினைச்சுபார்த்ததுண்டா??

"ரெஸ்ட் எடுக்க போணா கூடவா? கும்பிடு வச்சு வழியனுப்பிச்சு வைக்கனும்,

"அடேய் நாதாரிகளா? நீங்க சாவுற வரைக்கும் ரெஸ்ட் எடுக்காம வேல பார்த்தாலும் வாழைமரத்துக்குட சம்பாதிக்க முடியாது??

"இந்த வீணர்கள் எப்பத்தான் திருந்துவாய்ங்கனு உங்களுகாச்சும் தெரியுமா???

நன்றிங்க!! 

10 October 2015

நான் செய்த தவறுகள் ....!




"நம் பதிவர் சந்திப்பு +தமிழ்இணைய கல்வி கழகம் நடத்திய போட்டிக்கு நானும் என் அறிவுக்கு எட்டிய கருத்துகளை கட்டூரையாக எழுதி அனிப்பினேன்! அதில் நான் செய்த தவறுகளை விளக்கவே இந்த பதிவு! நான் சொல்லியுள்ளவற்றில் ஏதும் தவறிந்தால் தயங்காமல் தெரியப்படுத்தினால் இனி வரும் காலங்களில் தவறை திருத்திக் கொள்வேன்!

.நான் செய்த தவறுகளாக என் நண்பர்கள், என் இல்லாள் மற்றும் நான் நினைப்பது! இதில் யாரையும் குறை சொல்லியோ, போட்டி மனப்பான்மையிலை இதை எழுதவில்லை! 

அது போல நான் மற்றவர்களை விட அருமையாக எழுதிவிட்டேன் என்றும் அடுத்தவர்கள் சரியாக எழுதவில்லை என்றும் பொறாமை எண்ணத்திலும் இதை எழுதவில்லை  !
என் அறிவிற்கு எட்டாத விசயங்களை உங்களிடம் அறியவே இந்த பதிவு!!! 

மேலும் என் வாழ்நாளில்   கணினியில் எழுதிய முதல் படைப்பு!

1*இந்த துக்கடா கைபேசியில் எழுதியது!
அதனால் பல எழுத்து தவறுகள் வந்தது!
போட்டிக்கு அனுப்பிவிட்டு திருத்தியது!
விதிமுறைகளை சரியாக கவனிக்காமல் (ஆர்வகோளாறு) போட்டுக்கு அனுப்பிட்டு இடையில் சில கருத்துகளையும் வாக்கிய அமைப்புகளையும் திருத்தி எழுதியது!

கைபேசியில் எழுதியதால் பதிவு கணினியில் பார்க்கும் போது எவ்வாறு தெரியும் என்பதும், பதிவின் நீளம் எவ்வளவு என்பதும் எனக்கு தெரியாது  

2*எல்லார்க்கும் தெரிந்த விசயங்களில் அதில் தெரியாத விசயங்களை மட்டுமே எழுத வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன்

*யார்க்கும் தெரியாத விசயங்களை எழுதவே கூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன்!

 *3*போட்டி நடத்துவது தமிழ் இணைய கல்வி கழகம் என்பதை மறந்து அரசைப்பற்றி சில தவறான கருத்துக்களை எழுதியும் போட்டிக்கு அனுப்பிய பிறகு திருத்தியது தவறு என்பதை இப்பொழுது  உணர்ந்துவிட்டேன்!


ஒருவர் படிக்கும் போது அவர் எதிர்பார்த்த  பாதிப்படைய கூடிய கருத்துக்கள் இருக்கவேண்டும், புரியாத விசயங்களை எழுதகூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன்! 

*4*விதிமுறைகளை மீறிய படைப்பாக இருந்தாலும் அது நல்ல கருத்தாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்பதையும் உணர்ந்து கொண்டேன்!

ஒவ்வொரு படைப்பையும் தேர்ந்தெடுக்க அதன் துறை சார்ந்த வல்லுனர்கள் தேவையில்லை? பொதுவாணவர்கள் போதும் என்பதையும் தெரிந்து கொண்டேன்!
தலைப்புக்கு பொருத்தமில்லாத படைப்புகளை எழுத கூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன்!

ஒரு படைப்பை எந்த கண்ணேட்டத்தில் பார்க்கவேபார்க்கவேண்டும் என்பதும் எனக்கு தெரியாது!

வழக்கமாக கருத்துரை இடுபவர்கள்,பாராட்டுவதைவிட குறைகளை கூறி வழிகாட்டுங்கள்!

வழக்கமாக என் தளத்திற்கு வந்து கருத்துறை இடுபவர்களை இப்படு நான் பதிவிட்டு இருப்பதால் எனக்கு பொறாமை என்றோ ஆதங்கம் என்றோ தயவு செய்து நினைக்க வேண்டாம்!

என் தவறு சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வே!

ஏனென்றால் சிலர் சிலபல ஆண்டுகளாக எழுதிவருகீர்கள்
அதனால்தான் உங்களிடம் என் கருத்தை அறிய விழையும் முயற்சியே இந்த பதிவு!

நன்றி! 

08 October 2015

அண்ணே ஒரு டீ ...! 2

"(புதுசா வர்றவங்க முன்னால போய் சூடா ஒரு டீ குடிச்சிட்டு வந்துடுங்க! )




"கடைகார ஓனரிடம் தெரியலணா? என்று துள்ளி குதித்து ஓடியவன் நேராக வகுப்புக்குள் நுழைந்தான்!

ஏற்கனவே வகுப்பில் மாணவர் கூட்டம் காச் மூச் என்று கத்திமாணவிகளை வம்பளத்தி கொண்டிருந்தார்கள்!

"கிருஷ் உள்ளே நுழைய  சட்டென்று கூச்சல் நின்று ஒருசேர இவனை திரும்பி பார்த்தார்கள்!


அவள் ஒருத்தியை தவிர .?அவள் சுவாதிகா, சுறுக்கமாக சுவா !

(உங்களுக்கு  பிடித்த சினிமா நாயகிகளை  மனசுக்குள் ஓட்டிப்பாருங்கள் அதில் 75% சுவாதிகா இருப்பாள் )


அவள் பார்க்கிறாளா? என்று இவனும் பார்த்துக்கொண்டே அவன் இருக்கையை அடைந்தான்! 


பிறகு புரபஷர் வந்தார், இதை படித்ததான் நீங்கள் கைநிறைய சம்பாதிக்க முடியும், என்று பல தியரிகளை மிசின் போல துப்பிவிட்டு வெளியேற?


கசங்கிய டிஸ்யூ பேப்பர் போல மாணவ மாணவியர் வெளி வந்தனர் 

கனவுகளை சுமந்த கண்களில் பசியின் தாக்கம் தெரிய பலர் கேண்டினை நோக்கியும் சிலர் மரத்தடி நிழலை நோக்கியும் பசியாற சென்றனர்!

தூரத்தில் போகும் சுவா "வை நோக்கி தப தப வென்று கிருஷ் ஓடினான்!

ஹாய் சுவா? கெஞ்சம் நில்லேன் "

அவள் நின்று திரும்பி பார்த்து முறைத்து?

உனக்கு எத்தனதரம் சொல்றது என் பெயரை சொல்லி கூப்படாதேன்னு?

இவன் சிரித்து? கூப்படறதக்குதானேமா பெத்தவங்க பெருமையா பெயர் வச்சிருக்காங்க "?

ஆமா ?ஆனா நீ கூப்படறதக்கு இல்லே?

பின்ன யார் கூப்பிடனும்??

அது உனக்கெதுக்கு ஆனா? நீ கூப்பிட வேணாம்?
என்றவள் இவன் பதிலுக்கு காத்திராமல் நடக்க ஆரம்பிக்க,

ஏய் சுவா நில்லு ?

அவள் நிக்காமல் நடக்க 

சரியான கூர் இல்லாத பிள்ளையா  நீ???

அவள் ஒருநொடி  நிதானித்து நின்று திரும்பி அதே கோபத்துடன்? இடுப்பில் கைவைத்து 

உனக்கு யார் சொன்னா??

இவன் சிரித்து வேற யார் உங்க அப்பாதான், இல்ல இல்ல என் எதிர்கால மாமனார்,! என்றான்!


அதே நேரம் டீக்கடையில் டீகடை ஓனரும் அந்த நான்கு மாணவர்களும் ஒன்றாக கூடி சங்கேத பாஷையில் பேசிக்கொண்டார்கள் 

அவர்கள் அப்படி என்ன பேசியிருப்பார்கள்!?

-தொ-ட -ரு -ம்!


நன்றி !இந்த டீயில் எது குறை என்று கூறினால் நாளை சூடாக எழுதுவேன்! நன்றி!! 
"

07 October 2015

அண்ணே ஒரு டீ ....!



" இருபாலரும் படிக்கும் அந்த பிரபலமான இன்சினியரிங் கல்லூரி, ஆள் அதிகம் புலங்காத அத்துவான காட்டில் அழகாய் கம்பிரமாய் காட்சியளித்தது!

எதிர்கால இந்தியாவை வல்லரசாக்க நினைக்கும் பல மாணவ மாணவியர்  சிரித்தவாறும் பேசியவாறும் ,கல்லூரிக்குள் நுழைந்த வண்ணம் இருந்தனர்!

கல்லூரியின் அழகு பல கோடிகளை விழுங்கியிருக்கும்! படிக்கும் பிள்ளைகள் எல்லாம் கரன்சியில் புரளும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் !

கல்லூரி நுழைவாயிக்கு 100மீட்டர் தள்ளி ஒரே ஒரு டீகடை! சுற்றிலும் தகரம் வைத்து அடைத்து கீத்துமட்டையால் மூடி அது டீகடை தான் என்று நிருபிக்க அதன் ஓனர் பிரயானசப்பட்டு கொண்டிருந்தான்!

கடையின் ஒரு மூலையில் "சுவாதிகா டீ கடை "என்று தகர சதுரத்தில் தொங்கியது!

டீ குடிக்க வருபவர்களுக்காக இரு மர பெஞ்ச், கரி பாய்லர், சின்ன மேசை , மேசையின் மேல் நாலைந்து கண்ணாடி ஜாடிகள், அதற்குள் பாதியளவு பிஸ்கட் இத்யாதி வகைகள்,  ஜாடியின் மேல், பஜ்ஜி  வடை போண்டா! திண்பண்டங்கள்!


தற்சமயம் நான்கு மாணவர்கள் மர பெஞ்சில் உட்காந்தவாறு டீ குடித்து, அரட்டையடித்தும் இருந்தனர்!

கடையின் ஓனர்  நுறை ததும்ப டீ ஆத்திக் கொண்டிருந்தான்! ஆத்திய டீயை அவன் குடிப்பானா அல்லது யாருக்காச்சும் தருவானா, என யோசிப்பதற்குள்

"அண்ணே ஒரு டீ "என்றவாறு கதையின் நாயகன் கிருஷ் வந்தான்!முழுப்பெயர் கிருஷ்ணன்!

சினிமா ஸ்டார் போல் இல்லாவிட்டாலும் பார்க்க அழகாயிருந்தான், கல்லூரியில் நடக்கும் அத்தனை நிகழ்ச்களிலும் முதலாக இருப்பான்

அவனை பற்றி பிறகு விலாவரியாக பார்க்கலாம்!

நுரை ததும்பம் டீயை சப்பிக் கொண்டே அந்த நாலு மாணவர்களை பார்க்க அவர்களும் இவனை பார்க்க அறிமுகப்படுத்தி கொண்டார்கள்!

கடையின் ஒனர் "இத்தன நாளு உன்னை பாக்கலையே? என்ன பேரு என்றான்!

ஆமாண்ண எனக்கு டீ பிடிக்காது அதனால வரல என்பேரு கிருஷ்ணன்  எல்லாரும் கிருஷ் னு கூப்பிடுவாங்க "

ஒ அப்படியா இனிமே தினம் வருவியா?

கண்டிப்பா வருவேண்ணே, எனக்கு இந்த வருசம் டீ குடிக்கிறதுதான்  ப்ரெக்ஜெக்ட் "என்றான்!

டீ குடிக்கிறத பத்தியா ஆராய்ச்சி பண்ணணும்?

ஆமாண்ணே! என்ன பண்றது கடைசி வருசமாச்சே!

என்னமோ போங்க நான் படிக்கிறப்ப இப்படியலாம் இல்ல!

இப்பவும் இல்லதாண்ணே! நான் மட்டும்தான் வீம்புக்கு டீ ஆராய்ச்சி பண்றத பத்தி எடுத்திருக்கேன்
அதுவும் ஒரு பொண்ணுக்காக "என்றான்

அந்த கிறுக்கு பய புள்ள யாரு?


அதுவும் இங்கதாண்ணே படிக்குது?


சரியான கூர் இல்லாத பிள்ளையா இருக்கும் போல


கிருஷ் மனசுக்குள் அப்பனுக்கு பிறந்த அப்படித்தான் இருக்கும், என நினைத்தவாறு

தெரியலணா? சரி வரேன் என்றவன் துள்ளி ஒடினான்


தொடரும்!

நன்றி என் முதல் புது முயற்சி எப்படி இருக்கு என்று
சொன்னால் மீண்டும் தொடவேன் நன்றி 

06 October 2015

கால் கிலோ கவிதைகள் ..!




""உன் ...
குலத்தெய்வத்திற்கு.,.

குத்துவிளக்கேற்றி ..

கும்பிட்டுவந்தேன் ...!


"அன்றாடம் அபிஷேகம் செய்துவந்தேன் ...

அமாவாசையன்று ...

அக்னிசட்டி ஏந்தினேன் ....!


"அய்யனாரும் நானும் ...

அண்ணன் தம்பிகளானேம் ...!


"அசுர சக்திகளை...

அழிக்கின்றாராம் அய்யனார் .,

உன் அண்ணன்கள் சக்தியை ..

யார் ஒழிப்பது ,?

 "நான் சாமியாராகும் ..

தருணத்தில் ....

சம்மதம் என்கிறாய் ...!


""குலம் மாறக்கூடாது குத்தமாகிவிடும்?

குறுக்கே நுழைகிறார் .,

உன் முரட்டு அப்பா .,!


"அய்யனாரோ...

ஆனந்தமாய் சிரிக்கிறார் ...!      


உன் மதியையும் .,

என் விதியையும் ...

என்னவென்று சொல்லட்டும் ..!!

        
நன்றி! இவை 2006ல் நண்பர்களேடு உதவியால் புத்தகங்களாக்கி  நண்பர்களாக பிரித்துக் கொண்டேம்!

பல விசயங்கள. புதிதாக எழுத நினைத்தாலும் கணினி இல்லாததால் கைபேசியில் எழுத. கடுப்பாகிறது!

எந்த திரட்டியிலும் இணைக்கவும் இல்லை? எனவே 

தொடர்ந்து ஊக்கபடுத்தும் உள்ளங்களுக்கு  நன்றி நன்றி!!! 

05 October 2015

ம் ....என்னத்த சொல்ல ...?!



""பால் தட்டுப்பாடு ஏற்படும் -செய்தி 

"மாடுக என்னிக்கும் அடம்பிடிச்சதே இல்லங்க!

"இந்த மனுஷ  பயதான் அடம்பிடிக்கிறான் !


""நகை  போடாமல் இருப்பதே மேல் (Male )

"எப்பவும் போட்டுகிட்டே இருப்பது பீமேல் (Female)


"வெளங்காதவனுங்க வெங்காயத்துக்கு போராடினாங்க!
இந்த பருப்பு உளுந்து உங்க கண்ணுக்கு தெரியலையா??


   "பருவ மழையை நம்பி பத்துலட்சம் ஏக்கர் -செய்தி 

   "மீதி  ஏழு கோடி என்பது லட்சம்பேரு பல "தண்ணிய நம்பி "

   
"கண்ணுக்கு மை வச்சா பெண்ணுக்கு அழகு 

"விரல்ல மை வச்சா தமிழ் நாட்டுக்கே அழிவு 


"சுங்க சாவடியில நிக்கிறதால டீசல் வீணாகுதாம்??

நான் கேக்குறேன் எதுக்குயா? அங்க நிப்பாட்டுறிங்க!
வீட்டூல இடமில்லயா ?

தீவாளி வர்ற நேரத்துலதான்  டீசல் வீணானது தெரிஞ்சதா?? 

எப்படியோ பதுக்கி வச்ச சரக்க கொள்ளையா சம்பாதிச்சுடலாம்!!


"மனித வளம் நிறைந்தது தமிழகம் -அமைச்சர்

"உண்மைதானுங்க, சிறிசு பெரிசு "னு எல்லோரும் குடிச்சு  உங்களை நல்லா வளமா வச்சிருக்கோம்ல?


கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்கிறார்கள் ?

நாம யாரு கண்ணு தெரியாதவனுக்கு காலணா தரமாட்டோம் ,இதுல கைக்குழந்தைக்கு கப்பலா தருவோம்??


"புலி "க்கு வரியில்லையாம்?

வரிகுதிரை பார்த்திருக்கேன்?
இந்த வரிப்புலி பார்த்துரிக்கீங்களா??

பார்த்த சொல்லுங்க!!


கடுப்பாகி கன்னா பின்னானு எழுதிட்டேன்
நன்றி!! 

01 October 2015

சிரிக்க சில பொது அறிவு கேள்விகள்!





உங்க பொது அறிவ சோதிக்கிறதுக்கு முன்னால் 28.09.15பதிவையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க!! 


"1*இன்றைய இளைஞர்களை அடக்கி ஆள்வது எது??

விடை 1)அழகுப்பெண்கள் 2) ஆண்ராய்டு போன்கள்        3)அரசியல்வாதிகள்


"2*இன்றைய அழகுப்பெண்களை அடக்கி ஆள்வது எது??

விடை1) ஆபரணப்பொருட்கள் 2) அழகுசாதனப்பொருட்கள் 3) அழகான ஆடைகள்


"3*குடிமக்கள் பெரிதும் நம்பியிருப்பது எது??

விடை 1) சரக்கு 2) மேட்டூர் தண்ணி 3 )மம்மி


"4*Lkgல் குழந்தைகளை சேர்த்தவுடன் நாம் எதிர்பார்ப்பது எது??

விடை 1) டாக்டர் எஞ்சினியர் ஆகவேண்டும் 2) கைநிறைய சம்பாதிக்கவேண்டும் 3) கடல் கடந்து போகவேண்டும்

"5 *நடிகர் நடிகை பைத்தியங்களை பைத்தியமாக்குவது எது??

விடை 1 )அறிவுயில்லாமல் 2 )அழகு கவர்ச்சியினால் 3) பாவம் நாம்தானே பணம் தந்து வாழவைக்கனும் எனற முட்டாள்தனம் !

கேள்விகள் தொடரும் !


உங்க பதில வரிசையா சொன்னா என் அறிவ வளர்க்க ஏதுவாயிருக்கும் நன்றிங்க! 

29 September 2015

வீணாகும் உணவுப்பொருட்களில் ஒளிந்திருக்கும் விபரீதம்!



"மேல் காணும் படத்தில் உள்ளதுபோல் பரிமாறப்படும் உணவுப் பதார்த்தங்களை ஒருவரால் மீதம் வைக்காமல் சாப்பிடமுடியுமா? ஒருவர் எவ்வளவு பசியில் இருந்தாலும் உண்ணமுடியாது என்பதே உண்மை! அவ்வாறு மீதமாகும், அல்லது வீணாகும் உணவுப் பொருட்களினால் உண்டாகும் விபரீதம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நம் ஆடம்பர ஆசையாலும், அலட்சியத்தாலும்  உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 இலட்சம் டன் சமைத்த உணவுப்பொருட்கள்  குப்பையில்
கொட்டப்படுவதாக ஐநா சபையின் புள்ளிவிவரம்
அதிர்ச்சியளிக்கிறது!

ஒரு வேளை உணவுக்கூட , சரியாக கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் உலகம் முழுவதும் 140கோடி பேர்
சர்வதேச வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் அறிவிக்கிறது!

நாம் ஒவ்வொரும் ஒரு கைப்பிடி அளவு உணவினை சேமித்தால், பசி காரணமாக இறக்கும் 5வயதுக்குப்பட்ட சுமார் 90இலட்சம் குழந்தைகளை காப்பாற்றிவிடலாம்!

"தனிஒரு  வனுக்கு உணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம் "-என்று உணவு கிடைக்காமல் வறுமையில் வாடுபவனை கண்டு பாரதி கவிஞன் பாடிய பாடல் இது! ஆனால்

இன்று மீதமாகும் உணவுப் பொருட்களால்தான் ஜகத்தினை அழித்துவருகிறோம், என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை.

1947ம் ஆண்டிண் உலக மக்கள் தொகை 300மில்லியன்கள்! இன்று 1210மில்லியன்கள்.

ஒருபுறம் பசியால் வாடுவதும் மறுபறம் விளைந்த தானியங்களும் காய்கறிகளும் டன் கணக்கில் யாருக்கும் பயன்படாமல் வீணாகின்றன! சமைக்கும்
உணவில் 3ல்ஒரு பங்கு குப்பைகளில் கொட்டப்படுகின்றன!

அவ்வாறு வீணாகும் உணவுப் பொருட்களினால் உண்டாகும் மீத்தேன் வாயுதான் பருவநிலை மாற்றத்திற்கு மிக மிக முக்கிய தீங்கு விளைவிக்கிறது!

காற்றில் கரியமில வாயு அதிகரித்து பசுமை விளைவில் மாற்றம் ஏற்படுவதால் பூமிக்கு அருகில் உள்ள வளிமண்டலம் வெப்பமடைவதே புவி வெப்பமாதல் என்கிறார்கள்!!

வீணாக்கும் உணவுப் பொருளாலும் ,காய்கறி பழங்கள் போன்ற பொருட்கள்
அழுகுவதாலும் ,காற்றில் நைட்ரஜன் ஆக்ஸைடு அதிகரிக்கும்!

வீடுகளில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் "குளோரோ ஃப்ளோரோ கார்பன் "என்ற வாயுவும் வளிமண்டலத்தை அதிகம் பாதிக்கின்றன.

  வளிமண்டலத்தை அதிகம் பாதிக்கும் போது அமில மழை உண்டாக்க  காரணமாகின்றன .

வெப்ப காற்றின் பருவநிலை மாற்றத்தினால் பலவிதமான நோய்கள் வரும்!

மீத்தேன் ,கரியமில வாயு நைட்ரஜன் ஆக்ஸைடு, ஆகியன ஒன்றாக இணையும் போது ஏற்படும் வேதிவினையின் காரணமாக பவளப்பாறைகள் நிறம் அழிந்துவிடும், அடிக்கடி வறட்சி உண்டாகும், காடுகளில் தீவிபத்து ஏற்படும், பனிப்பொழிவு உண்டாகும்!

மீத்தேன் அளவு அதிகமாக கடல் மட்டம் உயர்ந்து  கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்!

வாகனங்களால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் விவசாயப் பொருட்களாலும் வீணாகும் உணவுப் பொருட்களாலும் உண்டாகும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாகும்.

மனிதனின் உணவுத்தேவையை பூர்த்திசெய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான தாவரங்களும் உயிரனங்களும் அழிக்கப்படுகிறது!
அதன் கழிவுகளை முறையாக பாதுகாப்பாக மறுசுழற்சி செய்ய முறையான வழிகள் ஏதுமில்லை
பருவநிலை மாற்றத்தினால் பல சிற்றுயிர்கள் முதல் மனிதன் வரை அதன் உணவுச் சங்கிலியில் மிதமிஞ்சிய மாற்றம் உண்டாகும்
100கிராம் பட்டு நூல் தயாரிக்க 1500பட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.

நம் பணத்செருக்கின் பலனாக பல்வேறு விசேசங்களில் ஒருவர் சாப்பிடுவதற்கு ஐந்தாயிரம் செலவு செய்கிறோம்!அளவுக்கு அதிகமான உணவுப்பொருட்களை அறியாமையால் வீணடிக்கிறோம்!
 
அன்றைய காலங்களில் வருடம் மும்மாரி மழை பொழிந்து விவசாயிகளும் செழித்து வளர்ந்து வந்தார்கள்! இன்று பருவநிலை மாற்றத்தாலும் சுற்றுச்சூழல்,சீர் கேட்டாலும் வானம் பார்க்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டோம்,என்பதை நாம் அறிய வேண்டாமா?

இன்றைய நவீன யுகத்தில் , அசுர வளர்ச்சியில் "பழையசோற்றை பார்க்காத ,உண்ணாத "புதுத்தலைமுறைகளை அல்லவா உறுவாக்கிவருகிறோம்!

நாம் வீணாக்கும் ஒவ்வொரு  உணவுப் பருக்கைக்குப் பின்னாலும் இந்த உலகம் பருவநிலை மாற்றத்தாலும் சுற்றுச்சூழலாலும் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது, அழித்துவருகிறோம் என்பதை அறிந்து கொள்வோம்!

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்  தோரோ -என்பது சாத்தனார் வாக்கு,

உணவுக் கொடுக்கும் இந்த உலகுக்கு நம்மால் முடிந்த அளவு உயிர் கொடுப்போம் வாருங்கள்!

அளவாக சமைத்து மிதமாக உண்டு வளமாகமிருப்போம்!
(
படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)
இப்படைப்பு வலைப்பதிவர் சந்திப்பு தமிழ் இணைய கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கிய போட்டிகளுக்காகவே எழுதப்பட்டது
வகை (2) சுற்றுச்சூழல்

இப்படைப்பு என் சொந்த படைப்புதான் என்றும் வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வரும்வரை வெளியாகாது என்றும் உறுதியளிக்கிறேன்

28 September 2015

ச்சும்மனாச்சுக்கும்!!!!!



""இந்தியாவில் 100ரயில் நிலையங்களில் வைபை -கூகூள் 


""பைபை சொல்ற இடத்துல எதுக்கய்யா? வைபை ????


""Make in. இன்டியா..

Skill. இன்டியா ...

Digital. இன்டியா ,..

அடுத்த ஆட்சிக்கு?

"போண்டியா?? அட போங்கய்யா??? 


""ஓட்டு ஒழுங்காப் போட்டா?

   எதுக்கு ஓட்டையாகுது?

   பஸ்சும் பர்சும்!!!! 


"''கண்ணு தெரியலணா ?தடவலாம் 

இனி எல்லாம் தெரிய தடவனும் 

இது ஆண்ராய்டு கட்டளை!!!


""மாற்றம் ,

முன்னேற்றம் ..

ஏமாற்றம் ,

மதுவ ஒழிக்கமுடியாது மணி!?!


""ஆட்சிய புடுச்சதால 

ஒருத்தர் நாடு சுத்தரார்..

ஆட்சிய புடிக்க 

ஒருத்தர் ஊர் சுத்தரார்

ஆக எல்லாருமே காதுல பூ சுத்தராங்க!!! 


""இப்ப நல்லா படி.,

  வேலையில்லயா ?

  புல்லா குடி!!!!

   


அம்புட்டுதாங்க! நன்றி 

27 September 2015

கால் கிலோ கவிதைகள்



"ஆராத்தி காண்பிக்கிறாய். ..

அம்மனுக்கு ...

சந்தன சிலைகள் 

எப்போது 

தட்டேந்தி 

ஆராத்தி எடுக்க ..

கற்றுக் கொண்டன ..

ஆச்சரியம் தாளாமல் 

அம்மனே..

பெருமூச்சு விடுகின்றாள் ...!!






நன்றி !! 

26 September 2015

இதனால் தெரிவப்பது என்னவெனில்..........?!



""அன்பு தாய்மார்களே!  ஓவர் குடிகாரர்களே! ஆசை எதிர்கட்சி எதிரிகளே! அக்கப்போர் தரும் அரசியல்வாதிகளே!!

      உங்களுக்கெல்லாம் தெரிவிப்பது என்னவெனில் 
நீங்க ஆவலா எதிர்ப்பார்த்த "மது ஒழிப்பை ஒருபோதும் என்னாலும் சரி எந்த காலமானாலும் சரி ஒழிக்க முடியாது??

     உலகம் முழுவதும் மதுக்கடைகள் இருக்கும் போது நான் மதுகடையை மூடுவேன் என்று எதிர்பார்க்கலாமா?

    போராடுபவர்கள் முதலில் இந்தியாவில் இருக்கும் மதுக்கடைகளை ஒழிக்க சொல்லுங்கள் பிறகு நானும் ஒழித்துவிடுகிறேன்!!

    சில எதிர்கட்சிகள் மதுவை ஒழிப்பதாக பகல்கனவு காண்கிறார்கள்! அது நடக்குமா?

  அன்பு குடிகாரர்களே "நீங்கள் பகல் இரவு என்று எந்த நேரமும் மப்பும் மந்தாரமாக கனவு கன்டால்தான் "என் வளர்ச்சியையும் இந்தியாவின் வளர்ச்சியையும் முன்னேற்ற முடியும் என்பதை நினைவில் கொள்க!!

      தமிழ்நாட்டில் நீங்கள் ஆண்டுக்கு குடிக்கும்அளவ வெறும்  85  மிலிட்டர்தான்! பக்கத்து மாநிலங்களை பாருங்கள் 100 110. என்று வளர்ச்சியடைகிறார்கள் !!

     நாம் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்து இதில் மட்டும் வளரவில்லை என்றால் எதிர்கால வரலாறு புவியியல் குவியியல், எல்லாம் மன்னிக்குமா ??

    ஓவராக குடிப்பவர்களை "அன்பால் "திருத்துங்கள்! அது எப்படி என தெரியவில்லை என்றால் "என் அமைச்சர் பெருமக்களை பார்த்து நடந்து கொள்ளுங்கள்! 

      தாய்மார்கள் யாரும் வருத்தமடையாதிர்கள்
எல்லா துறைகளில் நீங்கள் சாதனை படைத்தாலும் மதுகுடிக்கும் துறையில் சற்று பின்தங்கி உள்ளீர்கள் என்பதை உணருங்கள்!

    உங்களை உங்கள் குறைகளை கேட்பதற்காக ஒருவர் ஊர் ஊராக சுற்றிவருகிறார்! இது போல
இன்னும் எத்தனை பேர் சுற்றிவந்தாலும்? மதுவையும் என்னையையும் விட்டுவிடாதிர்கள்!!

    உங்களை காக்கும் சக்தி கடவுளுக்கு அடுத்த படி முதல் படி என எல்லா படியும் என்னிடம் மட்டுமே உள்ளது!!



எல்லாம் கற்பனையே!! ஆனால் நடப்பது உண்மையே நன்றி!!

24 September 2015

வண்ண ஆடை ஏற்றுமதிகளும் வளம் அழிக்கும் சாயக்கழிவுகளும் !!


"பிரபல ஜவுளிக்கடைகளில்  10 சதவிகிதம் தள்ளுபடி  விற்பனை என்றதும் குடும்பத்துடன் ஓடுகிறோம்! தள்ளுமுள்ளு ஏற்படுகிற கூட்டத்திலும் அந்ந தள்ளுபடியிலும் தள்ளுபடி வாங்கி ஆடை எடுத்து ஆனந்தப்படுகிறோம்! என்றாவது ஒரு நாள் அந்த ஆடைகளுக்கு பின்னால் இருக்கும் வரலாற்றை தெரிந்து கொண்டது உண்டா?
ஒவ்வொரு ஆடைக்குப்பின்னால் எத்தனை தொழிலாளர்களின் உழைப்பு, இறக்குமதி இயந்திரங்களின் இரைச்சல் ,எவ்வளவு தண்ணீர் வீணாக்கப்படுகிறது ?எத்தனை விதமான ரசாயன கலவைகள் பயன்படுத்தப்படுகிறது  ?கழிவுகளை மறுசுழற்சி எப்படி செய்கிறார்கள்? அதில் நடக்கும் மிகப் பெரிய சமுதாய சீர்கேடு எவ்வளவு என்று தெரியுமா??

ஆதிகாலம் மனிதன் கைகளிலால் ஆடைகளுக்கு சாயமேற்றி விற்பனைக்கு அனுப்பினான் !பிறகு இயந்திரங்களின் அதித வளர்ச்சியில் ஒரு புறம் நூலை கொடுத்தால் மறுபுறம் வண்ண ஆடைகளாக ரகம்ரகமாக விதம்விதமாக தரும் இயந்திரங்களில் வளர்ச்சியடைந்துள்ளான்!

திருப்பூர் ஈரோடு மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் பின்னலாடைகள் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்கிறார்கள் !அதனால் பல இலட்சகணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும்  வருமானம் கிடைக்கிறது! அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது!

நம் கைகளில் கிடைக்கும் ஆடைகள், ஜவுளிக்கடைகளுக்கு  வரும்முன் சுமார் 30விதமான தொழிற்சாலைகளுக்கு சென்று  வரும்! ஒரு நாளைக்கு டன் கணக்கில் உற்பத்தி செய்கிறார்கள், கிலோ கணக்கில் ரசாயன கலவைகள் பயன்படுத்துகிறார்கள் (dyes)  சாய கழிவு நீர் கோடிக்கணக்கான லிட்டர்கள் வெளிவரும் (Effluent water) இதை அப்படியே இயந்திரங்கள் மூலம் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்! இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது !!

சிறு  ,குறு ,ஆலைகளாக திருப்பூரில் 900சாய ஆலைகளும் கரூரில் 250சாய ஆலைகளும் உள்ளன! இந்த ஆலைகள் ஒரு நாள் பயன்படுத்தும் தண்ணீரை காவேரியாறில்  விட்டால் கரைபுரண்டு ஓடும் !குடிநீர் தட்டுப்பாடு இருக்கவே இருக்காது!!

ஆரம்பகாலங்களில் ஆத்தங்கரை ஓரங்களில் மட்டுமே சாய ஆலைகளை அரசு அமைக்க வலியுறித்தியது! காலமாற்றத்தில் சாய ஆலைகள் மிக மிக அதிக அளவில் அதிகரித்ததால் சாய கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்கவும் குடிநீர் தட்டுப்பாட்டை களையவும்  விவசாயத்தை காக்கவும் எல்லா ஆலைகளிலும் மறுசுழற்சி இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது (Reverse osmois system)எளிதாக ROஎன்பார்கள்.

ஒரு ஆடையை வண்ணமாக்கும் ஆலைகளுக்கு "டையிங் (Dying )என்றும் வெறும் வெண்மையாக மாற்றும் ஆலைகளுக்கு "பிளிச்சிங் "(Bleacing) என்றும் பெயர் உண்டு!

ஒரு ஆடை ,வண்ணமாக, மாறுவதற்கு 20மணி நேரங்களும் வெண்மையாக மாறுவதற்கு 16மணி. நேரங்களும் ஆகும்! இப்படி மாற்றமடைய பல விதமான ரசாயனங்கள் சேர்க்வேண்டும்

இந்த சாய கழிவுநீரை சுத்தம் செய்து மறுபடியும் பயன்படுத்துவதற்கு ஏழு, நிலைகளை கடக்கவேண்டும்! அதிலும் மறுசுழற்சி இயந்திரங்கள் அதிக விலை என்பதாலும், அடிக்கடி புரச்சனைகள் ஏற்படுவதாலும், ஆட்கள் பற்றாக்குறையாலும், அதிக அளவு செலவு ஆகுவதாலும், அதிக மாற்று ரசாயனங்கள் தேவைப்படுவதாலும், எந்த ஆலையிலும் முழுதாக சுத்தப்படுத்த மாட்டார்கள்!! முடியாது என்பதும் உண்மை! வேறு வழியே கிடையாது ஆற்றிலும்  கழிவுநீர் வடிகாலிலும்  எப்படியோ விட்டுவிடுவார்கள்.

.தமிழ்நாட்டில் 2000 TDS (total dissolved salt) உப்புதன்மையுடைய நீரில் பயிர்கள் வளரும் அரசு அனுமதித்த அளவும் அதுதான் !ஆனால் ஆற்றில் கலக்கும் சாய நீரானது இந்த அளவுகளுக்கு மிக மிக அதிகமாக இருக்கும்! இதனால்தான் ஆற்றின் வளம் குறைவதுடன் அதனை பயன்படுத்தும் மனிதன் முதல் விலங்குகள் வரை பல தீங்கு விளைவிக்கும் !மனிதர்களுக்கு "ப்ளுரையிடு " தண்ணீரில் அதிகமாக இருந்தால் பற்கள் மஞ்சளாகும் ஆண்மை குறைவும் ஏற்படும் !விலங்குகள் சினையாவதில் பிரச்சனை வரும்! அதன் பாலிலும் நஞ்சு கலந்துவிடும்!  விளை நிலங்களில் கலப்பதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும்! விளைந்த காய்கறிகளிலும் நஞ்சு கலந்திருக்கும்!

"சாய நீரை முதலில் முதல்நிலை சுத்திகரிப்பில் (primary effluent treatment plant) சுத்தம் பண்ண வேண்டும்! இதில் பல வண்ணத்தில் இருக்கும் நீர் சுத்தமாகிவிடும்! அதிலுள்ள கழிவுகளை  பிரிக்க சுண்ணாம்பு,பெரஸ், பாலி, ஆலம்  ஆன்டிஸ்கேலண்ட் ,ஹைட்ரோ குளரிக் அமிலம், டைபார்மர், சோடியம் மெட்டா பை சல்பேட், ஆகிய ரசாயனங்கள் வேண்டும்! (lime, ferrous, poly, antiscalent, hcl acid, dieformour, smps) இவ்னைத்து  ரசாயனங்கள் இருந்தால் மட்டுமே சாய நீர் சுத்தமாகும்!
இந்த நிலையில் சாய நீரின் உப்புதன்மை (tds) சுமார் 7000லிருந்து 9000வரை இருக்கும்!
முதல் நான்கு நிலைகளில் சுத்தமாகி வெளிவரும் கழிவில் கிட்டத்தட்ட உப்பின் அளவு(tds) 55000முதல் 75000ஆயிரம் இருக்கும்! இதில் ஒரு தேக்கரண்டி அளவு கழிவு நீரை 100லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்தால் வாயில் வைக்க முடியாத அளவுக்கு உப்பு கரிக்கும்! ஆக இதை அப்படியே ஆற்று நீரில் கலந்தால் என்னவாகும் என்பதை நினைத்துப்பாருங்கள்!

எவ்வளவு தீங்கு வரும் என்று எண்ணிப்பாருங்கள்!


இதை, கண்கானிக்கும் அரசு மாசு கட்டுப்பாட்டு  (TNBC) வாரியம்    எவ்வளவு கண்கானிப்புடன் இருந்தாலும் , ஆலை கழிவுகள் கலப்பதை தடுக்கமுடியவில்லை விவசாயிகள் குரல் ஓங்கும் போது ஆலைகளுக்கு அதிரடியாக சென்று ஆலை முதலாளிகளை எச்சரிக்கை செய்து திரும்புவார்கள்!இருந்தும் சாய கழிவுகள் கலப்பதை தடுக்க முடியவில்லை ?என்றதும், மறுபடியும் விவசாயிகள் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள்!
நம்மை, நாமே அழித்துவருகிறோம்.அதுதான் உண்மை!

சாய நீரை சுத்தமாக்குவதற்கு இவ்வளவு ரசாயனங்கள் தேவைப்படும் போது ஆடையை வண்ணமாக்குவதற்கு எவ்வளவு ரசாயனங்கள் தேவைப்படும்
லிக்கர் , சல்பர் காஸ்டிக், பெராக்ஸைடு, வெட்டிங் ஆயில் சோடா, ( liquor, salfor,caustic,peroixed,wetting oil)பிறகு ஒவ்வொரு  வண்ணத்திற்கும் ஒரு ரசாயனம், வண்ணத்தை அதிகமாக்க / குறைக்க ரசாயனங்கள், என,20வகைகள் தேவைப்படும்.டன் கணக்கில் உப்பும் (salt) பயன்படும்!

ஐந்தாவது நிலையில் வரும் அதிக கடினமான கழிவு  நீரை (குழகுழப்பாக இருக்கும்) எவாப்ரேட்டர் (Evaporater) என்கிற இயந்திரத்தில் பாய்லர் (Boilar) உதவியுடன் வெறும் உப்பை மட்டும் பிரித்து எடுப்பார்கள்! மிஞ்சும் இறுதி நீரை சூரிய ஒளியில் படும்படி அகலத் தொட்டிகளில் சேமிக்கவேண்டும்! சூரிய ஒளியில் ஆவியாக்குவதற்கு (solar evaporate bond) என்று பெயர்! ஆவியானது போக மீதமிருப்பதை அதிக சக்தி உள்ள மின் மோட்டார் மூலம் பிரித்து எடுப்பார்கள்! இதற்கு சிலட்ஜ் (Sluge) என்று பெயர்! இதையும் கடினமான "தார்பாலின்கள் "கொண்டு மூடி பாதுகாக்க வேண்டும்! இதை 0.1கிராம் அளவு கழிவை 1லிட்டர் தண்ணீரில் கலந்தால் முழுவதும் நஞ்சாகிவிடும்! இதை குடித்தால் மனிதன் மற்றும் விலங்குகள் விவசாயம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணருங்கள்!

ஒவ்வொரு சாய ஆலைகளிலும் டன் கணக்கில் சேமிக்கப்படும் இந்த "சிலட்ஜ் "என்கிற கழிவுகளை முறையாக மறுச்சுழற்சி செய்ய இதுவரையில் எந்த மாற்று வழிமுறைகளும் கண்டுப்பிடிக்கப்படவில்லை!

பரிசோதனை முயற்சியாக சில "சிமெண்ட் "ஆலைகளிலும் செங்கல் ஆலைகளிலும் முயற்சித்துப்பார்த்தார்கள்.
பயன் ஏதும் கொடுக்காததால் முயற்சி கைவிடப்பட்டது!

   எனவே "சிலட்ஜ் "எனும் கழிவுப் பொருளை அரசு வழிகாட்டுதலுடன் தேவைக்கேற்ப அகலமாக பள்ளங்கள் ஏற்படுத்தி சுற்றிலும் "கான்கிரிட் "சுவர்கள் அமைத்து அதனுள் சிலட்ஜ் களை நிரப்பி மூடிவிடுவார்கள் இதற்கு SLF என்று பெயர் (Safty land filling)

திருப்பூரில் அனைத்து சாய ஆலைகளுக்கும், L&T, (larsan&duproo) என்ற நிறுவனம்தான் தண்ணீர் வழங்கும்!

இந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்காமல் யாரும், எவரும், அவர்தம்
சொந்த நிலத்தில் கூட ஆழ்துளை,கிணறு மூலமோ? அல்லது வேறு வகையிலோ,ஒரு  சொட்டு நீரையும் எடுக்கமுடியாது!

அவ்வப்போது விவசாய தேவைகளுக்கும் குடிநீர் தேவைகளுக்கும், திறந்து விடும்  ஆற்று நீரையும், ஆலைமுதலாளிகள்
ஆறுகளின் ஒரத்தில் "வட்ட கிணறுகள் "அமைத்து உறிஞ்சிவிடுவார்கள்?
அதனால்தான் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை? என்று விவசாயிகள்   போராடுவார்கள்! அதற்கு இதுவும் ஒரு காரணமாகும்!

காலங்காலமாக, இந்த அவல நிலை தொடர்ந்து
வருகிறது! மறுபுறம் அதிகரித்துக்கொண்டும் வருகிறார்கள்!
மனிதர்களின் போராசை,என்று ஒழிகிறதோ அன்றுதான் விடிவுகாலம் பிறக்கும்!

நீர்வளங்களை காப்பதற்கு அரசு பல கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தவேண்டும்!

ஆலை நிறுவனங்களும் வழிமுறைகளை கடைப்பிடித்து மறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும், இதுவே
முழுமையான தீர்வு ஆகும்!

நாம் செய்யவேண்டியது வருங்கால சந்ததிகளுக்கு பணத்தை சேமிப்பதை விட சுத்தத்தையும் சுகாதர விழிப்புணர்வையும், கற்றுதருவதே நாம் செய்யும் உண்மையான பங்களிப்பாகும்!

ஏற்றுமதியாகும் ஒவ்வொரு ஆடைகளுக்குப்பின்னாலும் நம் வளம் அழிந்து வருகிறது,அழித்துவருகிறோம், என்பதை தெரிந்து கொள்வோம்!!


(பட உதவி -இணையம்)

இப்படைப்பு வலைபதிவர் சந்திப்பு -தமிழ் இனணய கல்வி கழகம் இனணந்து நடத்தும் "மின்தமிழ் இலக்கிய பபோட்டிகள் களுக்காகவே எழுதப்பட்டது!

வகை (2) சுற்றுசுழல் விழிப்புணர்வு
இவை என் சொந்த படைப்புதான் என்றும் வேறுஎங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வரும்வரை வேறெங்கும் வெளியாகாது என்றும் உறுதியளிக்கின்றேன் !நன்றி 

23 September 2015

நவீன காலத்தில் -கிராமக் கண்ணோட்டத்தில் தமிழ் வளர்ச்சி -ஒரு பார்வை!!!


"நாம் வெள்ளைகாரர்களிடமிருந்து சுதந்திரத்தை மட்டுமா  ?வாங்கினோம், அவர்கள் விட்டுச்சென்ற கட்டடங்கள், சாலைகள், பாலங்கள்  கூடவே இலவச இணைப்பாக ஆங்கிலத்தையும் பெற்று
இன்று வரை தமிழை கொஞ்சம், கொஞ்சமாக ,அழித்துக்கொண்டுவருகிறோம்! என்பதுதான் அப்பட்டமான உண்மை! கணினியை கண்டுப்பிடித்ததும் அவர்கள்தான்! அந்த கணினியில் நம் தமிழைப் , புகுத்தி அழகுபார்த்து,
வளர்ப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

அன்று என் பையனுக்கு ஆங்கிலமே தெரியாது? என்ற நிலை மாறி இன்று என் பையனுக்கு தமிழே தெரியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம! இப்படி சொல்வதுதான் கெளரவம், பெருமை, சாதனை, என்று படித்தவர் படிக்காதவர் பாகுபாடு கிடையாது!

தமிழக அரசில் அரசு வேலையில் இருப்பவர்கள்
13 ,00000) பதிமூன்று இலட்சம் பேர்! இவர்களின் குழந்தைகள் எல்லாம் அரசு பள்ளியில்தான் படித்து வருகிறார்கள் என்று யாராவது கூறமுடியுமா? கைநிறைய சம்பளம் வாங்கும் இவர்கள் அரசு பள்ளியில் சேர்த்தால் அவர்கள் கெளரவம்  என்னாவது, சமுகத்தில் அவர்கள் பெருமை என்னாவது?? 2013-14ஆண்டில் அரசு தொடக்கப்பள்ளிகள் 65.16 சதவிகிதமாகவும் தனியார் தொடக்கப்பள்ளிகள் 34.84 சதவிகிதமாகவும் அதிகரிப்பதற்கு யார் காரணம்? தற்போது அரசும் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில கல்வியை கொண்டுவந்து விட்டது? எதற்காக ?எல்லா மக்களுக்கும் , தனியார் மோகம் பிடித்து ஆட்டுவதால்
தமிழ் பள்ளிகள் தரமிழந்து விடும் என்ற ஆதங்க அரசியல் காரணம்தான்! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றால் தனியார் பள்ளிகளை அனைத்தும் தடை பண்ண வேண்டியதுதானே? மாட்டவே மாட்டார்கள்! ஒவ்வொரு தேர்தலுக்கும்கோடி கோடியாக அள்ளிதரும் அட்சய பாத்திருத்தை ஆட்சியாளர்கள் புறக்கணிப்பார்களா?  மக்களும்தான் விட்டுவிடுவார்களா? பள்ளி நடத்தும் பண முதலைகள் வேடிக்கைபார்ப்பார்களா!!!

இந்த நிலையில் தமிழை எப்படி வளர்ப்பார்கள்??
இருக்கவே இருக்கிறார்கள், வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள்! நம் சமுகத்தில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தையும, சாதாரணமானவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தையும் ஏற்படுத்தி மிக சிறப்பாக "தமிழை வளர்ப்பது நாம் தான் என்பதில் பெருமைபட்டு கொள்ளலாமா???


"தமிழ் படிக்க அரசு பள்ளிகளுக்கு செல்லும் நம் மாணவர்  விகிதம் 2013-14ஆண்டுகளில்
41.06சதவிகிதம் மட்டுமே! அதே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 58.94
சதவிகிதம்! நினைத்துப்பாருங்கள் எதில் நாம் வளர்ச்சி அடைகிறோம்??

வளர்ந்து வரும் நவீன காலத்தில் கிராமம் மட்டும் விதிவிலக்கா? இல்லை !அவர்கள் விவசாயம் பாதாளத்திற்கு போனாலும் அவர்கள் குழந்தைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளுக்குதான் அனுப்புகிறார்கள்? காரணம், எங்கள் தலைமுறைதான் காடு கரடு என்று அலைந்து திரிகிறோம்! எங்கள் பிள்ளைகளாவது நன்றாக, படித்து அரசு வேலைக்கு போகாவிட்டாலும், தனியார் நிறுவனத்திலாவது,  கைநிறைய சம்பாதிக்க தனியார் கல்வியே சிறந்தது என்கிறார்கள்!
தமிழை மட்டுமே படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்குமா?? தமிழை மட்டுமே படித்தவர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லமுடியுமா?இல்லை என்பதுதான் நாம் உணர வேண்டிய உண்மைகள்.

தற்சமயம்தான் கிராமப்புறங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது!

கிராமப் பொருளாதாரம் உயர்ந்தால்தானே கிராம மக்கள் முன்னேறுவார்கள் .
இனிவரும் காலங்களில்தான் அவர்கள் கணினியை கற்க வேண்டும்! அதன்பிறகுதான்
கணினியில் தமிழ் வளர்ச்சியை காணமுடியும்!

 அகில இந்தியா IIM.IIT போன்ற நுழைவுத் தேர்வுகளில் தமிழை மட்டும் படித்தவர்கள் எத்தனை பேர் வருடா வருடம் உள்நுழைகிறார்கள்! மிக மிக குறைந்த அளவுதான்!! சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் கடந்தும்
நம் நீதிமன்றங்களில் தமிழை வழக்கு மொழியாக்க, முடியவில்லை! நீதிபதி தமிழன்!! வழைக்கறிஞர் தமிழன்! வழக்கு தருபவன் தமிழன்! வாதாடுவதோ,தீர்ப்பு வழங்குவதோ  ஆங்கிலத்தில், இதில் எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள்!!


"தமிழை புது தலைமுறைகளுக்கு கற்றுத்தரும் அரசு ஆசிரியர்கள் விகிதம் 2013-14 ஆண்டுகளில் 42.91சதவிகிதம்! அதே அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்றுதரும் தனியார் ஆசிரியர்கள் விகிதம் 57.09சதவிகிதம்! எதில் நாம் அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம்

இன்றைய இளைய சமுதாயம் ஆண்ராய்டு கைபேசிகளுக்கு அடிமையாகிவிட்டார்கள்!! அதில் எத்தனை பேர் தமிழில் மட்டும் "குறுஞ்செய்தி, முகநூல் செய்தி அனுப்புகிறார்கள்! கேட்டுப்பாருங்கள் தமிழில் எழுதுவது மிக கடினம் என்பார்கள்! தமிழ் வளர்த்த பல சான்றோர்களை அவர்கள் நினைவு நாளில் மட்டும் நினைத்துவிட்டு பிறகு மறந்து விடுகி றோம்!இங்கு தமிழன் தமிழில் , பேச தயங்குகிறான் என்பது அவலமல்லவா?

"இணையத்தில் எழுதுவது தமிழன், படிப்பது தமிழன் என்ற
நிலை இருக்கும் சூழலில் வலைப்பதிவர் திருவிழா "என்றில்லாமல் தமிழ்ப்பதிவர் திருவிழா என்று இருப்பின் நம் தமிழுக்கு நம்மால் முடிந்த சிறு
பெருமையாக இருக்கும்!

பல வலைப்பதிவர்கள் எழுதிவந்தாலும் அதில் எத்தனை நபர்கள் பெயரைக்கூட தாய் தமிழில் வைத்திருக்கிறார்கள்.

இங்கு பிற மொழி கலப்பில்லாமல் பேசவும் முடியாது, வாழவும் முடியாது, என்பதுதான்
உண்மை நிலவரம்!!

மூன்று வயதில் முழுக்க பிற மொழிகளை ,புகுத்தி அறிவு வளர்த்து, கைநிறைய, வருமானம் கிடைத்தவுடன், முப்பது வயதுக்கு மேல் தான், பல தமிழர்களுக்கு ,தமிழ்மொழியின் மீது பற்றும் பாசமும் ஞானமும் வருகிறதோ?எனும் ஐயம் வருகிறது.


கணினியில் தமிழ் வளர்ச்சி என்பது ஒரு புறமாக இருந்தாலும் "தரணியில் அழியும் தமிழை வளர்ப்பதே நம்
தமிழுக்கும் தமிழனுக்கும் அடுத்த தலைமுறைக்கும் செய்யும் உண்மையான பங்களிப்பாகும்!!

தமிழ் வளர்வதும் வளர்ப்பதும் நம் கைகளில்தான் உள்ளது!!

தமிழை ஊக்கப்படுத்து வோம்! தமிழனையும் ஊக்கப்படுத்து வோம்
(புள்ளி விவர ஆதாரங்கள் NUEPA 2012-14)

"இப்படைப்பு " வலைப்பதிவர் திருவிழா -தமிழ்இனணய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகளுக்காக எழுதப்பட்டது
வகை (1)
இவை என் சொந்த படைப்புதான் என்றும் வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை வெளியாகாது என்றும் உறுதியளிக்கின்றேன்!!

21 September 2015

இனி என்று மாறுமோ...!




"அறிவு வளர்ந்திட ...

ஆங்கிலம் படிக்கணுமோ..

அவன் குடும்பம் தழைத்திட..

அயல்தேசம்  போகணுமோ...!


"அரைகுறை நாயகிக்கு...

அள்ளித்தரும் மனசு ...

அய்யா என்பவனை ...

அருவருப்பாய் பார்க்கும் பல தினுசு ..!


"பிணம் கூட ஏங்கிடுமே...

காலணா காசுக்கு...நம்.,

பிரதமரும் சொன்னாருங்க...

நூத்திபத்து கோடி பேருக்கு ...


"குறிதாக்கும் ஏவுகணை....

நுட்பம் போதுமய்யா..

கைதாகும் மீனவனுக்கு ...

கருனணயில்லையா...!


"நீ முந்தி  நான் முந்தி ..

மனப்  பிரச்சனையோ...

பண்பாடு வளர்ந்திடுமா ...

பதில் கூறு புதுதலைமுறையே..!


"பட்டம் படிப்பு போதும்மா தம்பி..

சமுக ஒற்றுமை..

சமுக நல்லிணக்கம்..

சமுக பண்பாடு ..

மாறிடுமோ உன்னை நம்பி ..!!


இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015--தமிழ் இனணய கல்வி கழகம் நடத்தும்
"மின் தமிழ் இலக்கிய போட்டி "களுக்காக எழுதப்பட்டது!

வகை (4) புதுக்கவிதை போட்டிகள் :முன்னேறும் உலகில் பண்பாட்டின் தேவைகள்! இவை என் சொந்த படைப்புதான் என்றும்  வேறு எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும் வரை வேறெங்கும் வெளியாகாது எனவும் உறுதியளிக்கின்றேன்!

19 September 2015

உழவனை அழிக்கும் பண்பாடுகள்!!



"ஏர் புடுச்ச கையெல்லாம் ..

  ஏசி ரூம் "க்கு ஏங்குதிங்க ..

  பஞ்சம் பிழைக்கும் பாமரனுக்கு. .

  பைபர் கேபிள் எதுக்குங்க ..!


"களத்து மேடு கவலை மறக்க ...

கண்டகண்ட "சீரியல் "பேசுறாங்க ..

கழைகெத்தியும் கருக்கருவாளும் .

கண்காட்சிய ஆக்கிட்டாங்க ...!

"சீமத்தண்ணு ஊத்தற நாளு ...

திருவிழா கூட்டம்தாங்க ..

அடுப்பு விறகுக்கும்..

அஞ்சு வருசம் மழையில்லங்க ..!


"கைநாட்டுக்காரன் காடு கரையில ..

"கம்பெனி  வேண்டாங்க ...

 கால் வயித்து கஞ்சிக்கும் ...

கையோந்த வைக்காதிங்க ...!!


"அஞ்சு மாச சிசுவும்

"ஆண்ராய்டு "ல விளையாடுதங்க..

அறிவு வளருமா..

அநியாயம் பண்ணாதிங்க ...!


"உண்மை பண்பாடு -அது 

உழவன் உள்ளத்தில் கண்டு ..

உலகறிந்த வலைப்பதிவர் -மாநாட்டில் ..

உரைத்துச் சொல்லுங்க நின்று ..!!!


இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!

வகை (4) புதுகவிதை போட்டிகள்! வளர்ந்து வரும் உலகில் பண்பாட்டின் தேவை!
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன் 

-கரூர்பூபகீதன் -